சீன நட்புறவை வலுப்படுத்த தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது  : ஜனாதிபதி

Published By: Priyatharshan

30 Sep, 2016 | 02:35 PM
image

இலங்கையும் சீனாவும் வரலாற்று ரீதியாக சிறந்த நட்புறவைப் பேணிவருகிறன்றன. அந்த நட்புறவை வலுப்படுத்தி முன்னெடுத்துச் செல்ல தற்போதைய அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

67 ஆவது சீன தேசிய தினம் மற்றும் சீன இலங்கை நட்புறவு சங்கத்திற்கு 35 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டும் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைக்கும் சீனாவுக்குமிடையே நிலவும் நட்பானது அபிவிருத்தி மற்றும் முதலீட்டுத்துறைகளிலும் சர்வதேச மட்டத்திலும் இன்று மிகவும் பலமாகவும் உயர்ந்த நிலையிலும் உள்ளது. 

சீனா எல்லா சந்தர்ப்பங்களிலும் எமக்காக குரல்கொடுத்துவரும் ஒரு நட்பு நாடு. கல்வி, சுகாதாரம், வீதி அபிவிருத்தி உள்ளிட்ட சகல துறைகளிலும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதில் சீனா இலங்கைக்கு வழங்கிவரும் உதவிகளுக்கு பாராட்டுத் தெரிவித்த ஜனாதிபதி, தான் ஜனாதிபதியாக சீனாவுக்கு மேற்கொண்ட முதலாவது விஜயத்தின்போது சீன அரசாங்கத்திடமிருந்தும் மக்களிடமிருந்தும் தமக்குக் கிடைக்கப்பெற்ற வரவேற்பை நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

அவ்விஜயத்தின்போது சீன ஜனாதிபதியிடம் தான் முன்வைத்த வேண்டுகோளின் பேரில் இலங்கையில் சிறுநீரக நோயாளிகளுக்கான விசேட சிறுநீரக வைத்தியசாலை இலங்கைக்கு சீனாவிடமிருந்து அண்மைக்காலத்தில் கிடைக்கப்பெற்ற நட்புப் பரிசாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்த வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

67 ஆவது சீன தேசிய தினம் தொடர்பாக பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களை ஜனாதிபதி வழங்கி வைத்தார். 

சீன - இலங்கை நட்புறவு சங்கத்தின் தலைவர் அமரதாச குணவர்தன ஜனாதிபதிக்கு நூலொன்றையும் கையளித்தார்.

இலங்கையின் சீனத்தூதுவர் யீ சியெங் லியெங் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33