மத்திய ஒசாகாவில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுமார் 20 சதுர மீட்டர் பரப்பளவில் தீ பற்றி எரிந்த பின்னர், காலை 10:45 மணியளவில் தீ அணைக்கப்பட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.ஒசாகாவின் கிடாஷிஞ்சி மாவட்டத்தில் அமைந்துள்ள எட்டு மாடி கட்டிடத்தின் நான்காவது மாடியிலேயே தீ விபத்து ஏற்பட்டதாக ஒசாகா நகராட்சி தீயணைப்பு துறைக்கு உள்ளூர் நேரப்படி காலை 10:20 மணியளவில் தகவல் கிடைத்தது.
நான்காவது மாடியில் உள்ள மனநல வைத்தியசாலையில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது.
60 வயதுடைய நபர் ஒருவர் வைத்திருந்த ஒருவரால் தீ மூட்டப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் தற்சமயம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து, 17 ஆண்களும், 10 பெண்களும், உயிருடன் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
சுமார் 70 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அம்பியூலன்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாதிக்கப்பட்டவர்களை ஒன்றன் பின் ஒன்றாக கட்டிடத்திலிருந்து வெளியேற்றி அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
அதேநேரம் அருகில் உள்ள கட்டிடங்களில் மக்களை வெளியேறுமாறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM