அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களுக்கு துணைபோக முடியாது - அமைச்சர் வாசு

Published By: Digital Desk 4

16 Dec, 2021 | 10:04 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் நோக்கம் கிடையாது. அதற்காக தவறான தீர்மானங்களுக்கு துணைபோகவும் முடியாது. யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் வகையிலான ஒப்பந்தம் தொடர்பில் உயர்நீதிமன்றம் சிறந்த தீர்வை வழங்கும் என முழுமையாக எதிர்பார்க்கிறோம் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

19ஆம் திருத்தத்தை நீக்க ஆதரவளிக்கமாட்டோம் : வாசுதேவ நாணயக்கார | Virakesari .lk

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எமது தலைமையிலான அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு முரனாக செயற்படுகின்றமை கவலைக்குரியது.கொள்கைக்கு எதிரான தீர்மானங்கள் அரசாங்கம் தொடர்பில் மக்களின் நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியையும்,அரசாங்கத்தின் கொள்கையினையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளுக்கு உண்டு.

யுகதவனி மின்நிலையம் இயற்கை எரிவாயு விநியோகத்தின் ஊடாக செயற்பட வேண்டும் என்பது அவசியமானதாகும்.இயற்கை எரிவாயு விநியோக நிறுவனத்திற்கும்,மின்சாரத்துறை அமைச்சுக்குமிடையில் சாதாரன ஒப்பந்தம் செய்துக் கொள்வது அவசியமாகும்.அதனை விடுத்து எரிவாயு விநியோகத்தின் உரிமையை பிற நாட்டின் தனியார் நிறுவனத்திற்கு ஏகபோகமாக விட்டுக் கொடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அமெரிக்க நிறுவனம் இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஏகபோக உரிமையை தனதாக்குவதன் ஊடாக எதிர்காலத்தில் தோற்றம் பெறும் சவால்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது.அதன் காரணமாகவே அமைச்சரவையின் மூன்று பிரதான உறுப்பினர்கள் அதற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறோம்.

யுகதனவி விவகாரத்திற்கு  சமூகத்தின் மத்தியில் பல எதிர்ப்புக்கள் தோற்றம் பெற்றுள்ளன.கைச்சாத்திடப்பட்டுள்ள யுகதனவி ஒப்பந்தத்திற்கு எதிராக பல தரப்பினர் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கினை தாக்கல் செய்துள்ளார்கள்.நீதிமன்றம் சிறந்த தீர்வை பெற்றுக் கொடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.

அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் வகையில் அரசாங்கத்திற்குள் தோற்றம் பெற்றுள்ள சக்திகளை தோற்கடித்து சிறந்த நிர்வாகத்தை முன்னெத்து செல்வோம்.அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் நோக்கம் கிடையாது.அதேபோல் அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களுக்கும் முடியாது.அரசாங்கத்தை பலவீனப்படுத்த திட்டமிட்ட வகையில் சூழ்ச்சி முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04