நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுக்க, கொவிட்-19 தடுப்பூசியைப் பெறுவது கட்டாயம் என்று சுகாதார அமைச்சகம் எந்த சட்டத்தையும் அல்லது விதிமுறைகளையும் வெளியிடவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சார்பில் உயர் நீதிமன்றுக்கு தெரிவிக்கப்பட்டது.
18 வயதிற்குட்பட்டவர்கள் கொவிட் தடுப்பூசியைப் பெறுவதைக் கட்டாயமாக்குவதற்கான அரசாங்கத்தின் முடிவு அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என்று கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை நீதிமன்றம் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் சட்டப் பிரதிநிதி இந்த தகவலை நீதிமன்றுக்கு அறிவித்தார்.
இந்த மனு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் சட்டப் பிரதிநிதி, தடுப்பூசியைப் பெற விரும்பும் எந்தவொரு நபரும் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம் என்றும், இது தொடர்பாக கட்டாய விதிமுறைகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் கூறினார்.
கலாநிதி தாரிணி ராஜசிங்கம் உட்பட மூவரினால் இந்த அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கொவிட் தடுப்பூசியைப் பெறுவதை கட்டாயமாக்கும் முடிவு சட்டத்திற்கு எதிரானது என்றும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு அத்தகைய உத்தரவைப் பிறப்பிக்கும் அதிகாரம் இல்லை என்றும் மனுதாரர்கள் அதில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயக சட்டப் பிரதிநிதியின் சாட்சியத்தை பதிவு செய்த பின்னர், வழக்கு 2022 ஜனவரி 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM