(எம்.ஆர்.எம்.வசீம்)
நாட்டில் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தவும் புதிய நீதிமன்றங்களை ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட உதவி செயலாளர் கனி விக்னராஜா மற்றும் தூதுக் குழுவினர் நீதி அமைச்சர் அலி சப்ரியை நீதி அமைச்சில் புதன்கிழமை (15) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது நீதித் துறையில் மேற்கொள்ளப்படும் புதிய திட்டங்கள் முன்னெடுப்புகள் குறித்து நீதி அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தவும் புதிய நீதிமன்றங்களை ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட பிரதிநிதிகள் இதன் போது அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த சந்திப்பில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் சார்பில் நிரந்தர பிரதிநிதி ரொபட் ஜூகம், பிரதி நிரந்தர வதிவிடப்பிரதிநிதி மலின் ஹார்விங், கொள்கை நிபுணர் சந்திரிகா கருணாரத்ன, ,அமைச்சின் செயலாளர் மாயாதுன்ன இணைப்புச் செயலாளர் ஸமீர் ஸவாஹிர், ஆலோசகர் பயாத் பாக்கிர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்ததாக நீதி அமைச்சு விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM