(எம்.எம்.சில்வெஸ்டர்)
ஏறக்குறைய 600 நாட்களுக்குப் பின்னர் பாடசாலை அணிகளுக்கிடையிலான அணிக்கு ஏழு பேர் பங்கேற்கும் 'ரக்பி செவன்ஸ்' போட்டித் தொடரை எதிர்வரும் 17 ஆம் திகதியன்று ஆரம்பிப்பதற்கு இலங்கை பாடசாலை ரக்பி சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக நடைபெறாமல் இருந்து வந்த பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 600 நாட்களுக்குப் பின்னர், 50 பாடசாலை ரக்பி அணிகள் பங்கேற்கும் பாடசாலை ரக்பி செவன்ஸ் போட்டியானது 5 மாகாணங்களுக்கு தனித்தனியாக நடத்தப்படவுள்ளது.
இதில் மேல் மாகாண பாடசாலை அணிகள் பங்கேற்கும் போட்டிகள் ரக்பி செவன்ஸில் பாடசாலை அணிகளின் தரவரிசைகளுக்கு ஏற்ப ஏ மற்றும் பீ என பிரிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தின் பீ பிரிவுக்கான போட்டிகள் எதிர்வரும் 18 ஆம் திகதியன்றும், ஏ பிரிவுக்கான போட்டிகள் 19 ஆம் திகதியன்றும் கொழும்பு ரோயல் கல்லூரி விளையாட்டுத் தொகுதியில் நடைபெறவுள்ளன.
மேலும் மத்திய மாகாண பாடசாலை அணிகள் பங்கேற்கும் போட்டிகள் எதிர்வரும் 27 ஆம் திகதியன் கண்டி, திரித்துவக் கல்லூரி மைதானத்திலும், வட மேல் மாகாண பாடசாலை அணிகள் பங்கேற்கும் போட்டிகள் எதிர்வரும் 28 ஆம் திகதியன்று குருணாகல் மலியதேவ கல்லூரி மைதானத்திலும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், ருவன் வெல்ல பொது மைதானத்தில் நடத்தப்படவுள்ள சப்ரமுவ மாகாண பாடசாலை அணிகளுக்கிடையிலான போட்டி எதிர்வரும் 30 ஆம் திகதியன்றும், காலி சுதந்திர வர்த்தக வலய மைதானத்தில் நடத்தப்படவுள்ள தென் மாகாண பாடசாலை அணிகள் பங்கேற்கும் போட்டிகள் எதிர்வரும் 31 ஆம் திகதியன்றும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளன.
இந்தப் போட்டித் தொடரில் மஹாநாம கல்லூரி,கன்னங்கரா கல்லூரி, பிரியரத்ன கல்லூரி, பாணந்துறை சுமங்கல கல்லூரி, பிலியந்தலை மத்திய கல்லூரி, நாலந்தா கல்லூரி, சென்.பெனடிக்ட் கல்லூரி, சென்.ஜோன் கல்லூரி, கேரி கல்லூரி, மொறட்டு கல்லூரி ஆகியன மேல் மாகாண பீ பிரிவில் பங்கேற்கின்றன.
மேல் மாகாண ஏ பிரிவில், ரோயல் கல்லூரி, ஆனந்தா கல்லூரி,வெஸ்லி கல்லூரி,தேர்ஸ்டன் கல்லூரி, சென்.ஜோசப் கல்லூரி, டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி, சென்.பீற்றர்ஸ் கல்லூரி, மொறட்டுவை பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மருதானை சாஹிரா கல்லூரி, கல்கிஸ்சை சென் தோமஸ் கல்லூரி, இசிப்பத்தன கல்லூரி, விஞ்ஞானக் கல்லூரி ஆகியன இடம்பெறுகின்றன.
மத்திய மாகாணத்தில் கிங்ஸ்வூட் கல்லூரி, திரித்துவக் கல்லூரி, சென்.சில்வெஸ்டர்ஸ் கல்லூரி, தர்மராஜா கல்லூரி, சென்.அன்தனீஸ் கல்லூரி,வித்தியார்த்த கல்லூரி,வாரியபொல ஸ்ரீ சுமங்கல கல்லூரி, ஸ்ரீ ராஹுல கல்லூரி ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
மேலும், தென் மாகாணம் மற்றும் வடமேல் மாகாணங்களில் தலா 7 பாடசாலை அணிகளும், சப்ரகமுவ மாகாணத்தில் 5 பாடசாலை அணிகளும் தத்தம் மாகாணங்கள் ரீதியாக விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM