(எம்.மனோசித்ரா)
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சகல பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர பொறுப்பு கூற வேண்டும் எனத் தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, அவரின் ஆலோசனைகளே நெருக்கடிக்கு காரணம் என்றார்.
அத்துடன் உரம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தினால் நெல் விவசாயம் உள்ளிட்ட ஏனைய பயிர் செய்கைகள் அனைத்தும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனை விட பாரதூரமான பிரச்சினையாக 6.7 மில்லியன் டொலர் நஷ்ட ஈட்டு தொகையை சீனாவிற்கு செலுத்த வேண்டியேற்பட்டுள்ளது. இந்த தொகையை தவறிழைத்தவர்கள் தனிப்பட்ட ரீதியில் செலுத்த வேண்டும். மாறாக அரசாங்கம் இதனை செலுத்த வேண்டிய தேவை கிடையாது.
சமையல் எரிவாயு சிலிண்டர்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கும் உரிய தரப்பினர் பொறுப்புகூற வேண்டும். தர நிர்ணயசபையும் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும். நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையும் இதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பில் பாரிய பொறுப்பு அமைச்சர்களுக்கு காணப்படுகிறது. எனவே அமைச்சரவை பத்திரங்கள் தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்து அமைச்சர்கள் தீர்மானங்களை எடுக்க வேண்டும். மாறாக அமைச்சர்கள் வீதி சமிஞ்ஞைகளைப் போன்று செயற்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM