19 வயதுக்குட்பட்டோருக்கான (இளையோர்) ஆசிய கிண்ணம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் டிசம்பர் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
ஐ.சி.சி. அகாடமி ஓவல் மைதானத்தில் டிசம்பர் 23 அன்று நடைபெறவுள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா, ஐக்கிய அரபு இராச்சியத்தை எதிர்கொள்ளும்.
அதே நாளில் இடம்பெறும் மற்றொரு போட்டியில் 2017 ஆம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தானை ஆப்கானிஸ்தான் சந்திக்கும்.
டிசம்பர் 24 அன்று இலங்கை தனது முதல் ஆட்டத்தில் குவைத்தை சார்ஜாவில் எதிர்கொள்கிறது.
பாகிஸ்தான் தனது பரம எதிரியான இந்தியாவை டிசம்பர் 25 ஆம் திகதி அன்று ஐ.சி.சி. அகாடமி ஓவல் மைதானத்தில் எதிர்கொள்கிறது.
இந்த தொடரின் அரையிறுதிப் போட்டிகள் டிசம்பர் 30 ஆம் திகதி நடைபெறுவதுடன், இறுதிப் போட்டி டிசம்பர் 31 ஆம் திகதி டுபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும்.
எட்டு நாடுகள் பங்கேற்கும் இந்த நிகழ்வில், ஆசிய கிரிக்கெட் அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
குழு ஏ யில் இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற அணிகளும், குழு பி யில் இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளும் இடம்பிடித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM