நாட்டில் வாகன இறக்குமதிக்கு புதிய விசேட பெறுமதி சேர் வரி விதிக்கப்பட்டால் (ஜி.எஸ்.டி ) இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை மேலும் உயரும் என இலங்கை வாகன இறக்குமதி சங்கத்தின் செயலாளர் அரோஷ ரொட்ரிகோ தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் தொற்று நோயால் அந்நிய செலவணியை சேமிப்பதற்காக அரசாங்கத்தால் மொத்த வாகன இறக்குமதிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் நிதி அமைச்சரின் கூற்றுப்படி, 2021 ஆம் ஆண்டு பெறுமதி சேர் வரி குறித்து வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது. மற்றும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அத்திட்டத்தை செயல்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் தொலைத்தொடர்பு, மோட்டார் வாகனங்கள், சிகரெட்கள், மதுபானங்கள், பந்தயம் மற்றும் விளையாட்டுகள் (கேமிங் ) ஆகியவை இணையங்கள் மூலம் நிர்வகிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும் வாகன இறக்குமதி தலைப்பு குறித்து பேசுவதற்கு கூட தற்போது பொருத்தமானது அல்ல என்று கூறிய வாகன இறக்குமதி சங்க செயலாளர் மக்கள் பல சிரமங்களுக்கு மத்தியிலும் புதிய வாகனங்களை கொள்வனவு செய்ய முயற்சிக்கின்றனர்.
இறக்குமதியாளர்கள் எதிர்நோக்கும் இந்த நெருக்கமான சூழ்நிலையில் வாகன இறக்குமதிக்கு இவ்வாறான பாரிய வரிகளை விதிக்க கூடாது என்றும் கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM