பணம், தங்க ஆபரணங்கள் கொள்ளை : பணிப்பெண் உட்பட இருவர் கைது

Published By: Gayathri

14 Dec, 2021 | 03:15 PM
image

(எம்.மனோசித்ரா)

பணிப்பெண்னாக பணிபுரிந்த வீட்டில் பணம், தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டமை தொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட இரு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வெலிக்கடை பொலிஸ் பிரிவில் வீடொன்றில் பணியாற்றிய பெண்ணொருவர் 280,000 ரூபா பணம் மற்றும் வீட்டிலுள்ள ஏனைய பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய நுகேகொட குற்ற விசாரணைப் பிரிவினரால் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

அதற்கமைய கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான பெண்ணொருவரும், கொள்ளையிட்ட பொருட்களை தன்வசம் வைத்திருந்த பிரிதொரு சந்தேகநபரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் 38 மற்றும் 39 வயதுகளையுடைய ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் அவர்களால் கொள்ளையிடப்பட்ட இரு கையடக்கத் தொலைபேசிகள், நவீன ரக தொழிநுட்ப கணனி, இரு தங்க சங்கிலிகள் மற்றும் இரு தங்க மோதிரங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. 

நுகேகொட குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08