(எம்.மனோசித்ரா)
பணிப்பெண்னாக பணிபுரிந்த வீட்டில் பணம், தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டமை தொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட இரு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வெலிக்கடை பொலிஸ் பிரிவில் வீடொன்றில் பணியாற்றிய பெண்ணொருவர் 280,000 ரூபா பணம் மற்றும் வீட்டிலுள்ள ஏனைய பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய நுகேகொட குற்ற விசாரணைப் பிரிவினரால் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
அதற்கமைய கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான பெண்ணொருவரும், கொள்ளையிட்ட பொருட்களை தன்வசம் வைத்திருந்த பிரிதொரு சந்தேகநபரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் 38 மற்றும் 39 வயதுகளையுடைய ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் அவர்களால் கொள்ளையிடப்பட்ட இரு கையடக்கத் தொலைபேசிகள், நவீன ரக தொழிநுட்ப கணனி, இரு தங்க சங்கிலிகள் மற்றும் இரு தங்க மோதிரங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
நுகேகொட குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM