கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் 10 பேரை காவு கொண்ட ட்ரோன் தாக்குதலுக்கு எந்த அமெரிக்க வீரர்களும் அல்லது அதிகாரிகளும் பொறுப்பேற்க மாட்டார்கள் என்று பென்டகன் கூறியுள்ளது.
தலிபான்கள் காபூலைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டணி காபூலை விட்டு வெளியேறிய இறுதி நாட்களில் இந்த தாக்குதல் நடந்ததாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த ட்ரோன் தாக்குதலில் ஒரு உதவி பணியாளர் மற்றும் ஏழு குழந்தைகள் / சிறுவர்கள் உட்பட அவரது குடும்பத்தின் ஒன்பது உறுப்பினர்கள் இறந்தனர்.
உதவிப் பணியாளரின் வாகனம் இஸ்லாமிய அரசின் உள்ளூர் கிளையான IS-K உடன் தொடர்பு கொண்டதாக அமெரிக்க உளவுத்துறை நம்பியது.
காபூல் விமான நிலையத்திற்கு வெளியே ஒரு தற்கொலை குண்டுதாரி 170 பொதுமக்கள் மற்றும் 13 அமெரிக்க வீரர்களை பலியெடுத்த சில நாட்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் நடந்தது.
ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து, அமெரிக்க மத்திய கட்டளையின் ஜெனரல் கென்னத் மெக்கன்சி ஆகஸ்ட் 29 அன்று நடந்த தாக்குதல் ஒரு "துக்ககரமான தவறு" என்று விபரித்தார்.
இது தொடர்பில் கடந்த மாதம் வெளியிடப்பட்ட உயர்மட்ட உள்ளக மதிப்பாய்வில், எந்த சட்டமும் மீறப்படவில்லை, மேலும் தவறான நடத்தை அல்லது அலட்சியத்திற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பதால், ஒழுங்கு நடவடிக்கை தேவையில்லை என்று அமெரிக்கா கூறியது.
இந் நிலையில் திங்களன்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் மேற்படி மதிப்பாய்வுக்கு ஒப்புதல் அளித்ததாக பல அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM