லோகன் பரமசாமி
மேற்கு பசுபிக்கரையோரத்தில் உள்ள போகன்வில்லி என்றஅழகிய மிகச் சிறிய தீவு பத்து வருட ஆயுதப்போராட்டத்தின் பின்னர் பப்புவா-நியூகினியாவிடமிருந்துசுதந்திரம் பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.
போராட்டகாலத்தில் பப்புவா-நியூகினியா அரசுக்கு ஆதரவாகச்செயற்பட்ட பொலிஸாருக்கும் போராட்ட காலத்தில்ஆயுதமேந்தி தாக்குதல்களை நடாத்திய போராளிகளுக்கும் இடையில் கைகுலுக்கல்கள் இடம்பெற்றுபுரிந்துணர்வுகள் ஏற்படுத்தப்படுத்தப்படும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தென்மேற்கு பசுபிக் கரையில் உள்ள போகன்வில்லித் தீவுகள்இரண்டு பிரதான நிலப்பரப்புக்களைக் கொண்டவை. புக்கா என்ற 50கிலோ மீற்றர் நீளமான தீவும்போகன்வில்லி எனப்படும் பிரதானமான 200 கிலோமீற்றர் நீளமுமான தீவுமாகும். அத்துடன் மேலும்பல சிறுசிறு தீவுக் கூட்டங்களையும் கொண்டதொரு பிராந்தியமாகவும் அப்பகுதி காணப்படுகிறது.
சுமார் முன்று இலட்சம் மக்கள் மட்டுமே வாழும் இந்தப்பிரதேசத்தின் அழகிய வெண்மணற் கடற்கரைகளும் நீலக்கடலும் நீண்ட நெடிய மலைத்தொடர்களும்அதன் அழகை வெளிப்படுத்துபவையாகக் காணப்படுகின்றன.அத்துடன் இந்தத் தீவுகள் செப்புச்சுரங்கங்களுக்கு பெயர் பெற்றவையாகவும் இருப்பது அதன்விதியை நிர்ணயிப்பதாக அமைந்திருக்கிறது.
எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளிலும் மிகக்கடுமையான அரச ஒடுக்குமுறையை சந்தித்த இந்தத் தீவு மக்கள் பல்வேறு பண்பாடுகளைக்கொண்ட பழங்குடி இனத்தவர்களாகவும் தமது ஆதிகால வாழ்வை அதிகம் நேசிப்பவர்களாகவும் இருக்கின்றனர்.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-12-12#page-8
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM