(எம்.எப்.எம்.பஸீர்)
வத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ப்ரீத்திபுர கடலில் நீராடச் சென்ற இரண்டு பாடசாலை மாணவர்கள், கடலையால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போன நிலையில் இன்று (13) காலை கடற்படையினரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
வத்தளை - எந்தேரமுல்ல பகுதியைச் சேர்ந்த, மஹர பகுதியின் பிரபல பாடசாலை ஒன்றில் 10 ஆம் தரத்தில் கல்வி பயிலும் கே.கே. ருவிந்த புன்சர (15) மற்றும் எம். சஞ்சித சந்தகெலும் (15) ஆகிய இரு மாணவர்களே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர்களாவர்.
வத்தளை ப்ரீத்திபுர கடற்கரைக்கு நேற்று முன் தினம் ஞாயிரு (12) மாலை பாடசாலை மாணவர்கள் நான்கு பேர் சென்றுள்ளனர். அவர்கள் கடலில் நீராடிக் கொண்டிருந்த வேளையில், அவர்களில் இருவர் கடலலையினால் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் காணாமல்போயுள்ளனர்.
காணாமல்போன மாணவர்களை தேடும் நடவடிக்கையில் கடற்படை சுழியோடிகள் மற்றும் பிரதேசவாசிகள் ஈடுபட்டிருந்த நிலையில் இரு மாணவர்களும் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளனர். நீராட பொருத்த மற்ற பகுதியில் நவர்கள் நிராடியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட இரு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM