(எம்.எம்.சில்வெஸ்டர்)
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் கொழும்பிலிருந்து களுத்துறை வரையிலான 33 ஆவது தேசிய இளையோர் மரதன் ஓட்டப் போட்டியில் தரங்க ஹல்பகேவும், கொழும்பிலிருந்து மொரட்டுவை வரையிலான பெண்களுக்கான அரை மரதன் ஓட்டப் போட்டியில் இரேஷா பெர்னாண்டோவும் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றனர்.
நேற்றைய தினம் (12) கொழும்பு காலி முகத்திடத்திலிருந்து களுத்துறை மாவட்ட செயலகம் வரையிலான மரதன் ஓட்டப் போட்டியில் மாத்தறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றிருந்த தரங்க ஹல்பகே முதலிடம் பிடித்தார். இவர் போட்டித் தூரத்தை 2 மணித்தியாலங்கள் 37 நிமிடங்கள் 39 செக்கன்களில் நிறைவு செய்தார்.
கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்திருந்த ஷஷேன் மாலக்க 2 மணித்தியாலங்கள் 39 நிமிடங்கள் 39 செக்கன்களில் நிறைவு செய்து இரண்டாமிடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தையும், களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்திருந்த நிரோஷ் அஞ்சுல 2 மணித்தியாலங்கள் 52 நிமிடங்கள் 08 செக்கன்களில் நிறைவு செய்து மூன்றாமிடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.
களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த இரேஷா பெர்னாண்டோ பெண்களுக்கான அரை மரதன் ஓட்டப் போட்டியை 1 மணித்தியாலமும் 32 நிமிடங்கள் 37 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடம் பிடித்து தங்கம் பதக்கம் வென்றார்.
இப்போட்டியில் 1 மணித்தியாலமும் 34 நிமிடங்கள் 30 செக்கன்களில் நிறைவு செய்த கம்பஹா மாவட்டத்தின் கயானி புத்திகா இரண்டாமிடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தையும், மாத்தறை மாவட்டத்தின் ஹிருணி தில்மினி 1 மணித்தியாலமும் 38 நிமிடங்கள் 47 செக்கன்களில் நிறைவு செய்மு மூன்றாமிடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.
இதேவேளை, மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்றிருந்த நுவரெலியாவைச் சேர்ந்த சில்வெஸ்டர் தோமஸ் சார்ள்ஸ் 6 ஆவது இடத்தையும் (3மணி 46 நிமி.51 செக்.), பாலவிக்கேஷ்வரன் செல்வகுமார் 7 ஆவது இடத்தையும் (4மணி 01 நிமி. 27 செக்.), மன்னாரைச் சேர்ந்த அருளாசன் தமிழ் வேந்தர் 10 ஆவது இடத்தையும் (4 மணி 11 நிமி. 49 செக்.) பிடித்தனர்.
பெண்களுக்கான அரை மரதன் ஓட்டப்போட்டியை 1 மணித்தியாலம் 54 நிமிடங்கள் 32 செக்கன்களில் நிறைவு செய்த நுவரெலியாவைச் சேர்ந்த மோசஸ் ராகினி 9 ஆவது இடத்தைப் பிடித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM