சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பினால் பெண்ணொருவர் உயிரிழப்பு!

Published By: Vishnu

13 Dec, 2021 | 11:30 AM
image

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பினால் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வில்கமுவ, பிதுருவெல்ல, தேவகிரிய பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குண்டசாலை பகுதியில் உள்ள பெண்ணின் வாடகை வீட்டில் டிசம்பர் 1 ஆம் திகதி காலை அவர் உணவு சமைத்துக்கொண்டிருந்த போது எரிவாயு தொடர்பான வெடிப்பு ஏற்பட்டது.

இதனால் தீக் காயங்களுக்கு உள்ளான அவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந் நிலையிலேயே வெள்ளிக்கிழமை (10) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அரச பகுப்பாய்வாளரிடம் இருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40