விறகு சேகரிக்க சென்ற பெண்ணை 4 நாட்களாக காணவில்லை

Published By: Digital Desk 4

10 Dec, 2021 | 03:33 PM
image

(க.கிஷாந்தன்)

நுவரெலியா - வலப்பனை கும்புக்வெல பகுதியில் விறகு சேகரிக்க சென்ற பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

கும்புக்வெல மெதிலந்த பகுதியில் வசித்த 72 வயதான பீ.எம். டிங்கிரி மெனிக்கா என்ற மூதாட்டியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

அவர் கடந்த 6 ஆம் திகதி காலை 9.30 அளவில் வீட்டுக்கு அருகில் உள்ள காட்டு பகுதிக்கு விறகு சேகரிக்க சென்றுள்ளார்.

அவர் இதுவரை வீடு திரும்பாத நிலையில் அவரின் புதல்வர்களும் பிரதேச மக்களும் தேடி வருகின்றனர்.

இது தொடர்பில் அருகில் உள்ள தெரிபே பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸாரும் இணைந்து தேடுதலை முன்னெடுத்த போதிலும் மூதாட்டியை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது.

எனினும் கடந்த 8 ஆம் திகதி முன்னெடுத்த தேடுதலில் குறித்த பெண் விறகு வெட்டுவதற்காக எடுத்துச் சென்ற கத்தியை கண்டுபிடித்தனர்.

அதனை தொடர்ந்து பின்னர், அருகில் உள்ள காட்டில் தேடிய போது, உடைந்த மரக் குற்றியில் குறித்த மூதாட்டி அணிந்திருந்த உடையும், விறகு தூக்கும் போது தலையில் வைத்துக் கொள்ள எடுத்துச் சென்ற சேலையும் கண்டெக்கப்பட்டுள்ளது. எனினும் மூதாட்டியை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது.

இதனால் மோப்ப நாய்களை பயன்படுத்தி மூதாட்டியை கண்டுபிடிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

எனினும் இதுவரை காணாமல் போன டிங்கிரி மெனிக்கா தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செறிவூட்டப்பட்ட அரிசி பாடசாலைகளுக்கு வழங்கும் பணி...

2024-04-19 15:51:28
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49