(இராஜதுரை ஹஷான்)
இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்கள் இனிவரும் காலங்களில் மட்டுப்படுத்தப்படும். தேசிய உற்பத்திகளை மேம்படுத்த நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
விவசாயத்துறை அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இரசாயன உரம் மற்றும் இரசாயன கிருமிநாசினி இறக்குமதிக்காக தனியார் தரப்பினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிலைபேறான விவசாயம் தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கையில் எவ்வித மாற்றமும் கிடையாது. நிலைப்பேறான விவசாய கொள்கையை செயற்படுத்துவதற்காக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பல நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு வரவு-செலவு திட்டத்தின் ஊடாக நாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தற்போது வெளிநாட்டு கையிருப்பு பிரதான பிரச்சினையாகவுள்ளது. அரசாங்கத்திடமிருந்த கையிருப்பு அத்தியாவசிய உணவு பொருட்கள், மருந்து, எரிபொருள் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கும், அரச முறை கடன்களை மீள செலுத்துவதற்கும் செலவழிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய உணவு பொருட்களுக்காக பெருமளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக இறக்குமதி செய்யப்படும் பால்மா மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கிராமிய அபிவிருத்திக்காக வரவு –செலவு திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தேசிய உற்பத்திகளை மேம்படுத்த நாட்டு மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM