சமயல் எரிவாயு விவகாரம் : அமைச்சர் பந்துல, லசந்த உள்ளிட்டவர்களுக்கு எதிராக குற்றவியல் விசாரணைக் கோரி எழுத்தாணை மனு!

Published By: Digital Desk 3

09 Dec, 2021 | 11:18 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் மற்றும் இலங்கை தரநிலை நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் அகியோருக்கு எதிராக குற்றவியல் விசாரணைகளை ஆரம்பிக்க பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடக் கோரி எழுத்தாணை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பற்ற சமையல் எரிவாயு சிலிண்டர்களை இறக்குமதி செய்து, அவற்றை விநியோகித்தமையை மையப்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று இந்த எழுத்தாணை மனு ( ரிட்)தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

' விநிவித பெரமுன' வின் பொதுச் செயலரும் சமூக செயற்பாட்டாளருமான  நாகானந்த கொடித்துவக்கினால் இந்த  மனுவை தாக்கல்ச் செய்துள்ளார்.

அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, லாப் மற்றும் லிட்ரோ எரிவாயு நிறுவனங்கள், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை, இலங்கை தரச்சான்றிதழ் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

சமயல் எரிவாயு  சிலிண்டர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பு தரங்களை வகுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு மனுதாரர்  இந்த மனுவூடாக கோரியுள்ளார்.

அத்துடன் பாதுகாப்பற்ற எரிவாயு சிலிண்டர்கள் சார் விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் நட்டஈட்டை செலுத்த, லிட்ரோ மற்றும் லாப் எரிவாயு நிறுவனங்களுக்கு உத்தரவிடுமாறும்  மனுதாரர்  கோரியுள்ளார்.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் டி.எம்.எச். திஸாநாயக்க, இலங்கை தரச்சான்றிதழ் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் சித்தீகா சேனாரத்ன ஆகியோரின் அலட்சியப் போக்கினால், சமயல் எரிவாயுவை பயன்படுத்திய பலருக்கு உடல் ரீதியிலான கயங்கள் மற்றும் சொத்து இழப்புக்கள் பதிவாகியுள்ளதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் இம் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று  (09) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில்...

2024-03-29 15:37:15
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37