(நா.தனுஜா)
பாகிஸ்தானின் சியல்கோட் நகரில் இலங்கைப் பிரஜையான பிரியந்த குமார தியவதன மிகமோசமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் எவ்வித பக்கச்சார்புமற்ற முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன் குற்றவாளிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், இவ்விசாரணைகள் குறித்து தாம் உன்னிப்பாகக் கண்காணிக்கவுள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றது.
இதுகுறித்து இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஊடாக அந்நாட்டுப்பிரதமர் இம்ரான்கானுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
சட்டத்தரணிகள் சங்கம் இலங்கையிலுள்ள 21 ஆயிரத்திற்கும் அதிகமான சட்டத்தரணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மீயுயர் கட்டமைப்பாகும்.
பாகிஸ்தானின் சியல்கோட் நகரில் கடந்த 3 ஆம் திகதி இலங்கைப் பிரஜையான பிரியந்த குமார தியவதன மிகமோசமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மிகுந்த கவலையடைந்துள்ளோம்.
இந்த மிலேச்சத்தனமான படுகொலையை உடனடியாகக் கண்டனம் செய்த உங்களுடைய நடவடிக்கையைப் பாராட்டுகின்றோம்.
அதேவேளை பிரியந்த குமார தியவதனவின் படுகொலை தொடர்பில் எவ்வித பக்கச்சார்புமற்ற முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறும் குற்றவாளிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதன் ஊடாக பாதிக்கப்பட்ட தரப்பினரின் உரிமைகளைப் பாதுகாக்குமாறும் பாகிஸ்தான் அரசாங்கத்தையும் அதன் சட்ட அமுலாக்கக்கட்டமைப்புக்களையும் வலியுறுத்துகின்றோம்.
மேலும் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உன்னிப்பாகக் கண்காணிக்கவேண்டியதன் அவசியத்தை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை என்பதுடன் அதற்காக நாம் பாகிஸ்தான் சட்டத்தரணிகள் சங்கத்தின் உதவியையும் நாடியிருக்கின்றோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM