(எம்.மனோசித்ரா)
கொவிட் தொற்றினைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சினால் தொடர்ந்தும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எதிர்காலத்தில் புதிய பிறழ்வுகள் தோற்றம் பெறக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமுள்ளன. அவை அனைத்திற்கும் சுகாதார அமைச்சு தயாராகவுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் புதன்கிழமை (8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
தற்போது நாட்டில் நாளாந்தம் 700 - 750 தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். எனினும் 350 - 400 பேர் மாத்திரமே குணமடைகின்றனர். அது மாத்திரமின்றி 20 - 25 மரணங்களும் பதிவாகிக் கொண்டிருக்கின்றன. தற்போது நாடளாவிய ரீதியில் 159 சிகிச்சை நிலையங்கள் காணப்படுகின்றன.
அவற்றில் 17,155 சிகிச்சை படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளபோதிலும், 7,669 தொற்றாளர்கள் மாத்திரமே சிகிச்சைபெற்று வருகின்றனர்.
அதேபோன்று 77 பேர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த 159 சிகிச்சை நிலையங்களிலும் 110 - 120 ஒட்சிசன் தேவையுடைய தொற்றாளர்கள் உள்ளனர்.
இவ்வாறான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளபோதிலும், எதிர்காலத்தில் புதிய பிறழ்வுகள் தோற்றம் பெறக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமுள்ளன. அவை அனைத்திற்கும் சுகாதார அமைச்சு தயாராகவுள்ளது.
எனினும் எந்த பிறழ்வு தோற்றம் பெற்றாலும் அதிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான ஒரே வழிமுறை சுகாதார விதிமுறைகளை இறுக்கமாக பின்பற்றுவதாகும்.
பல சந்தர்ப்பங்களிலும் சுகாதார வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளபோதிலும், மக்கள் அதனைப் பின்பற்றுவதில்லை. எனவே அபாயத்தை உணர்ந்து மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM