பாகிஸ்தானில் பிரியந்தவுக்கு நேர்ந்த நிலை பாராளுமன்றில் மனுஷவிற்கும் நேர்ந்திருக்கும் - ராஜித

Published By: Digital Desk 4

06 Dec, 2021 | 07:47 PM
image

(நா.தனுஜா)

பாராளுமன்றம் என்பது உறுப்பினர்களின் அறிவுமட்டத்தையும் புத்திசாலித்தனத்தையும் வெளிப்படுத்துவதற்கான இடமேயன்றி, உடற்பலத்தை வெளிக்காட்டுவதற்கான இடமல்ல.

இருப்பினும் பாராளுமன்றத்தில் உள்ள குண்டர்களுக்கு அவர்களது வரையறைகள் என்னவென்பது பற்றித் தெரியவில்லை. அதன்விளைவாக அண்மையில் பாகிஸ்தானில் பிரியந்த குமாரவிற்கு ஏற்பட்ட நிலை எமது கட்சி உறுப்பினர் மனுஷ நாணயக்காரவிற்கு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்பட்டன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

Articles Tagged Under: ராஜித சேனாரத்ன | Virakesari.lk

இவ்வாறானதொரு சூழ்நிலையில் தற்போதைய அரசாங்கத்தை எந்தளவு தூரம் இயங்க அனுமதிப்பது? இந்த அரசாங்கத்தை எப்படி மாற்றியமைப்பது? அதன் பின்னர் புதிய அரசாங்கத்தை எவ்வாறு உருவாக்குவது? என்பது குறித்து ஆளுந்தரப்பில் அங்கம்வகிக்கின்ற சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்துரையாட ஆரம்பித்திருக்கின்றார்கள்.

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் ஆளுந்தரப்பிற்குள்ளேயே பாரிய எதிர்ப்பு காணப்படுகின்றது. இருப்பினும் அந்த எதிர்ப்பலை மிகமுக்கிய சந்தர்ப்பங்களில் மாத்திரமே வெளிப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

'அடக்குமுறைகளுக்கு எதிரான எதிரக்கட்சிப் பாராளுமன்றம்' என்ற தலைப்பில் பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் சக்தியினால் அதன் தலைமைக்காரியாலயத்தில் திங்கட்கிழமை (6) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் கடந்த வாரம் மிகவும் துரதிஷ்டவசமான சம்பவங்கள் பதிவாகியிருந்தன. பாராளுமன்றத்தில் வாத, விவாதங்களும் தீவிர தர்க்கங்களும் இடம்பெறுவது வழமையானதாகும்.

அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் பொருத்தமற்ற அல்லது தவறான கருத்துக்கள் வெளியிடப்படும் பட்சத்தில், சபாநாயகர் அதில் தலையிட்டு குறித்த உறுப்பினரை மன்னிப்புக்கோருமாறு வலியுறுத்துவார்.

அதற்கமைவாக சம்பந்தப்பட்ட உறுப்பினரும் சபையில் மன்னிப்புக்கோருவதே காலங்காலமாகப் பின்பற்றப்பட்டுவரும் பாராளுமன்ற சம்பிரதாயமாகும்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏதேனும் கருத்துக்களை வெளியிட்டுவிடுவார்கள் என்று அஞ்சி அவர்களைத் தாக்கவேண்டிய அவசியமில்லை.

பாராளுமன்றம் என்பது உறுப்பினர்களின் அறிவுமட்டத்தையும் புத்திசாலித்தனத்தையும் வெளிப்படுத்துவதற்கான இடமேயன்றி, உடற்பலத்தை வெளிக்காட்டுவதற்கான இடமல்ல.

எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான மனுஷ நாணயக்கார மிகத்திறமையானவர் என்பதுடன் தனது வாதங்களை தர்க்கரீதியான நியாயங்களுடன் மிகத்தெளிவாக முன்வைக்கக்கூடிய ஒருவராவார்.

அதன்விளைவாக அவரது உரையை செவிமடுப்பது சில தரப்பினருக்குப் பிரச்சினைக்குரிய விடயமாக இருக்கக்கூடும்.

எனவே அவர்மீதான தாக்குதலையும் பாராளுமன்ற சம்பிரதாயங்களை முழுமையாக மீறும் வகையிலான நடவடிக்கைகளையும் கண்டிக்கும் வகையில் பாராளுமன்றத்திற்குச் செல்லாமல் ஒரு வலுவான செய்தியை உலகிற்கு வெளிப்படுத்தியிருக்கின்றோம்.

இன்றளவிலே தற்போதைய அரசாங்கம் பாராளுமன்றத்திலும் பிரதேசசபைகளிலும் மாத்திரமே அதிகாரபலத்தைக் கொண்டிருக்கின்றது.

ஏனெனில் பொதுநிதியைப் பயன்படுத்தி ஊழல்மோசடிகளில் ஈடுபட விரும்புபவர்களும் முறைகேடாக செயற்படுபவர்களும் அவற்றுக்குத் தலைமைதாங்குவதால் அவ்விரு கட்டமைப்புக்களிலும் அரசாங்கம் பலத்தைக் கொண்டிருக்கினறது.

இந்த அரசாங்கத்தை எந்தளவு தூரம் இயங்க அனுமதிப்பது? இந்த அரசாங்கத்தை எப்படி மாற்றியமைப்பது? அதன் பின்னர் புதிய அரசாங்கத்தை எவ்வாறு உருவாக்குவது? என்பது குறித்து ஆளுந்தரப்பில் அங்கம்வகிக்கின்ற சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்துரையாட ஆரம்பித்திருக்கின்றார்கள்.

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் ஆளுந்தரப்பிற்குள்ளேயே பாரிய எதிர்ப்பு காணப்படுகின்றது. இருப்பினும் அந்த எதிர்ப்பலை மிகமுக்கிய சந்தர்ப்பங்களில் மாத்திரமே வெளிப்படுகின்றது.

நாட்டின் தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்போவதில்லை என்றும் அவற்றைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும்கூறி ஆட்சிபீடமேறிய அரசாங்கம், இப்போது எமது நாட்டிற்கே உரித்தான முக்கிய வளங்கள் அனைத்தையும் விற்பனை செய்துகொண்டிருக்கின்றது.

அதேபோன்று அத்தியாவசியப்பொருட்கள் உள்ளடங்கலாக அனைத்துப் பொருட்களினதும் விலைகள் பெருமளவால் அதிகரித்திருப்பதுடன் மக்களில் வாழ்க்கைச்செலவு வெகுவாக உயர்ந்திருக்கின்றது.

இப்போது அரசாங்கம் இந்தியா உட்பட ஒவ்வொரு நாடுகளுக்கும் சென்று கடன்பெறுகின்றது. ஆனால் மீளச்செலுத்தவேண்டிய கடன்களுக்காக அரசாங்கம் அடுத்த வருடத்திற்குள் 6 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் திரட்டிக்கொள்ளவேண்டிய நிலையில் இருக்கின்றது.

உண்மை நிலைவரம் இவ்வாறிருக்கையில், பாராளுமன்றத்தில் உள்ள குண்டர்களுக்கு அவர்களது வரையறைகள் மற்றும் மட்டுப்பாடுகள் என்னவென்பது பற்றித் தெரியவில்லை.

பாகிஸ்தானில் பிரியந்த குமாரவிற்கு ஏற்பட்ட நிலை மனுஷ நாணயக்காரவிற்கு ஏற்பட்டிருக்கக்கூடும். இது இலங்கைப் பாராளுமன்ற வரலாற்றில் கறுப்பு நாளாகும் என்று குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43