கொரோனா விதிமுறையை மீறி பிக் பொஸ் நிகழ்ச்சிக்கு சென்றதாக நடிகர் கமல்ஹாசன் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டிற்கு விளக்கம் கேட்கப்படும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
பிக் பொஸ் நிகழ்ச்சியின் கடந்த 5 சீசனாக நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், அண்மையில் வெளிநாடு சென்று திரும்பிய அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு நவ. 22ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார்.
இந்நிலையில், வீடு திரும்பி 7 நாட்கள் முடிவடைவதற்குள் கடந்த சனிக்கிழமை நடந்த பிக்பொஸ் நிகழ்ச்சியின் படப் பிடிப்பில் கலந்து கொண்டதாக கமல் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவத்துறை செயலாளரிடம் திங்கள்கிழமை கூறுகையில்,
கொரோனா விதிமுறையை மீறியது தொடர்பாக நடிகர் கமல்ஹாசனிடம் அரசுத் தரப்பில் விளக்கம் கேட்கப்படும் என்றார்.
கொரோனா விதிமுறைகளின்படி, நோய்த் தொற்றிலிருந்து வீடு திரும்பிய பிறகு 7 நாட்கள் கட்டாய வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM