ஆளுந்தரப்பு உறுப்பினர்களிடம் பிரதமர் மஹிந்த விடுத்துள்ள வேண்டுகோள்

Published By: Digital Desk 4

06 Dec, 2021 | 06:21 AM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்தின் கூட்டணியில் உள்ள பங்காளி கட்சிகளுக்கு இடையிலான  முரண்பாடுகளுக்கு தீர்வு கண்டு ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணி என்ற ரீதியில் அரசியலில் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும்.

முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் கருத்துரைப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆளும் கட்சி குழு கூட்டத்தின் போது வலியுறுத்தியுள்ளார்.

ஆசிரியர் - அதிபர் சம்பளத்தை இரு கட்டமாக அதிகரிக்க அரசாங்கம் இணக்கம் -  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ | Virakesari.lk

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று அலரிமாளிகையில் ஆளும் கட்சி குழு கூட்டம் இடம்பெற்றது.

அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

பிரதமர் தலைமையில் இடம்பெற்ற ஆளும் கட்சி குழு கூட்டத்தின் போது பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன. கூட்டணின் பங்காளி கட்சிகளுக்கிடையில் தோற்றம் பெற்றுள்ள முரண்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

கூட்டணியில்  பங்காளி கட்சிகளுக்கிடையில் தோற்றம் பெற்றுள்ள முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பது அவசியமாகும். கூட்டணியின் அனைத்து தரப்பினரையும் அரசியல் ரீதியில் ஒன்றினைந்து செயற்படுவது அவசியமாகும்.

அரசாங்கத்தையும் கூட்டணிமையும் பலவீனப்படுத்தும் வகையில் ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் கருத்துரைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆளும் கட்சி உறுப்பினர்களிடம் வலியுறுத்தினார்.

நாட்டு மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து அரசியல்வாதிகள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.ஆட்சிக்கு வந்ததன் பின்னர்  மக்களிடமிருந்து விலகியுள்ளதை பல விடயங்கள் தற்போது உணர்த்தியுள்ளது.

மக்களுடன் ஒன்றினைந்து செயற்படுவது மிகவும் கட்டாயமானதாகும் என பிரதமர் ஆலோசனை வழங்கினார்.

பொருளாதார நிலைமைகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது.தேசிய உற்பத்திகளை வலுப்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

திட்டங்களை முழுமையாக செயற்படுத்தும் பொறுப்பு அரச அதிகாரிகளுக்கு மாத்திரமல்ல ,அரசியல்வாதிகளுக்கும் உண்டு.மக்களுக்கான திட்டங்கள் சிறந்த முறையில் செயற்படுத்தப்படுகின்றதா என்பது குறித்து அரசியல்வாதிகள் ஆராய வேண்டும் எனவும் பிரதமர் ஆலோசனை வழங்கினார் என  இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38