(இராஜதுரை ஹஷான்)
அரசாங்கத்தின் கூட்டணியில் உள்ள பங்காளி கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகளுக்கு தீர்வு கண்டு ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணி என்ற ரீதியில் அரசியலில் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும்.
முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் கருத்துரைப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆளும் கட்சி குழு கூட்டத்தின் போது வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று அலரிமாளிகையில் ஆளும் கட்சி குழு கூட்டம் இடம்பெற்றது.
அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
பிரதமர் தலைமையில் இடம்பெற்ற ஆளும் கட்சி குழு கூட்டத்தின் போது பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன. கூட்டணின் பங்காளி கட்சிகளுக்கிடையில் தோற்றம் பெற்றுள்ள முரண்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
கூட்டணியில் பங்காளி கட்சிகளுக்கிடையில் தோற்றம் பெற்றுள்ள முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பது அவசியமாகும். கூட்டணியின் அனைத்து தரப்பினரையும் அரசியல் ரீதியில் ஒன்றினைந்து செயற்படுவது அவசியமாகும்.
அரசாங்கத்தையும் கூட்டணிமையும் பலவீனப்படுத்தும் வகையில் ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் கருத்துரைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆளும் கட்சி உறுப்பினர்களிடம் வலியுறுத்தினார்.
நாட்டு மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து அரசியல்வாதிகள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.ஆட்சிக்கு வந்ததன் பின்னர் மக்களிடமிருந்து விலகியுள்ளதை பல விடயங்கள் தற்போது உணர்த்தியுள்ளது.
மக்களுடன் ஒன்றினைந்து செயற்படுவது மிகவும் கட்டாயமானதாகும் என பிரதமர் ஆலோசனை வழங்கினார்.
பொருளாதார நிலைமைகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது.தேசிய உற்பத்திகளை வலுப்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
திட்டங்களை முழுமையாக செயற்படுத்தும் பொறுப்பு அரச அதிகாரிகளுக்கு மாத்திரமல்ல ,அரசியல்வாதிகளுக்கும் உண்டு.மக்களுக்கான திட்டங்கள் சிறந்த முறையில் செயற்படுத்தப்படுகின்றதா என்பது குறித்து அரசியல்வாதிகள் ஆராய வேண்டும் எனவும் பிரதமர் ஆலோசனை வழங்கினார் என இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM