(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
பாகிஸ்தான் சியால்கோட் பகுதியில் அடித்து சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு எரித்துக்கொல்லப்பட்ட இலங்கை பிரஜையான பிரியந்தகுமார மீதான அடிப்படைவாத வன்மத்தை இலங்கை அரசாங்கம் வன்மையாக கண்டிப்பதாக சபை முதல்வர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட ஆளுந்தரப்பு சபையில் பதிவு செய்தது.
பாகிஸ்தான் சியால்கோட் பகுதியில் அடித்து எரித்துக்கொல்லப்பட்ட இலங்கை பிரஜை விவகாரம் குறித்து நேற்று சனிக்கிழமை, பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சி தனது அதிர்ப்தியை வெளிப்படுத்தியது.
இது குறித்து பாராளுமன்றத்தில் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார,
பாகிஸ்தானில் துரதிஷ்டவசமாக ஒரு மரணம் நேர்ந்துள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தில் கற்ற பிரியந்தகுமார, பாகிஸ்தானில் ஒரு தொழிற்சாலையில் பணியாற்றியவர்.
அவர் உயரிய பதவியிலும் இருந்தார். அவரை பாகிஸ்தானில் ஒரு இனக்கும்பல் ஒன்றுசேர்ந்து நடுவீதியில் தாக்கி எரித்து கொன்றுள்ளனர்.
முற்றுமுழுதாக இது மத அடிப்படைவாத வெறித்தனத்தில் இடம்பெற்ற தாக்குதலாகும். மதத்துடன் தொடர்புபட்ட பதாகை ஒன்றினை நீக்கினார் என்ற காரணத்திற்காக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எனினும் இந்த விடயம் குறித்து பாகிஸ்தானில் உள்ள எமது தூதரகம் செயற்படும் விதம் பலவீனமானது. இப்போதும் அதிகளவான இலங்கையர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகின்றனர்.
அதேபோல் இந்த சம்பவம் குறித்து பாகித்தானிய பிரதமர் தனது வருத்தங்களை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அடிப்படைவாத தரப்பிடம் மாட்டிகொண்டு எமது இலங்கையர்கள் அழுத்தங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அரசாங்கம் இந்த விடயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இது குறித்து வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கூறுகையில்,
எல்லைகளுக்கு உற்பட்ட அடிப்படைவாதிகளினால் அடித்துக்கொல்லப்பட்டுள்ள பிரியந்தகுமார என்ற இலங்கையரின் மரணத்தை நாம் நாடாக முழுமையாக கண்டிக்கின்றோம். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்த காலகட்டத்தில் இலங்கைக்கு வருகைதந்து இலங்கையுடன் உறவை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதையும் தாண்டி 2005 ஆம் ஆண்டில் இருந்தே சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை நாம் கையாண்டு வருகின்றோம். இவ்வாறான நட்புறவை சீர்குலைக்கு விதமாக இந்த அடிப்படைவாத செயற்பாடுகள் அமைந்துள்ள காரணத்தினால் சபாநாயகர் அவர்கள் பாகிஸ்தான் பிரதமருடன் கலந்துரையாடி, பாகிஸ்தான் பாராளுமன்றத்திற்கும் இதனை கொண்டு சென்று அவதானம் செலுத்த வலியுறுத்தி, இந்த குற்றத்தை செய்தவர்களுக்கு நடவடிக்கை எடுக்கவும், பாகிஸ்தானில் உள்ள ஏனைய இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அச்சமின்றி பணியாற்றும் நடவடிக்கையை முன்னெடுக்க ஈடுபட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
நேற்று காலையில் விசேட கூற்றொன்றை முன்வைத்த சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன இது குறித்து கூறுகையில்,
உள்ளக அடிப்படைவாதிகளினால் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த, பாகிஸ்தானிய தொழிற்சாலையொன்றில் பணியாற்றிய முகாமையாளர் பிரியந்த குமாரவின் மரணத்தை நாம் வன்மையாக கண்டிப்பதுடன் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM