முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முக்கிய பாதுகாப்பு அதிகாரியாக செயற்பட்ட நெவில் வன்னியாராச்சி இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சொத்துக்களை அறிக்கையிடாமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 5 வழக்குகளிலிருந்தும் அவருக்கு பிணை வழங்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய கட்டளையிட்டுள்ளார்.
குறித்த 5 வழக்குகளிலிருந்தும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசுப்பிணை மற்றும் இரண்டு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் குறித்த வழக்கு ஜனவரி மாம் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரையிலும் பாதுகாப்பு பிரதான அதிகாரியாக கடமையாற்றிய மேஜர் நெவிலின், அம்பாந்தோட்டை, மெதமுலனவிலுள்ள காணி ஒன்றில் கடந்த பெப்ரவரி 26 ஆம் திகதி அகழ்வு நடவடிக்கை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM