(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
சீனாவுடன் நாம் வர்த்தக உறவை முன்னெடுப்பதில் தவறேதும் இல்லை, எமது அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் நிலத்தையோ வளத்தையோ எவருக்கும் விற்கப்போவதில்லை. ஆனால் எதிர்கட்சியினருக்கு இன்று சீன மேனியா நோய் தொற்றியுள்ளதாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற துறைமுகங்கள் அமைச்சு மற்றும் நீர் வழங்கல் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
கொழும்பு துறைமுக கிழக்கு முனைய பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவுக்கு கொண்டுவந்து அடுத்த ஆண்டில் கட்டம் கட்டமாக அதன் பணிகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மேற்கு முனையத்தை அதானி நிறுவனத்துடன் இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் தெற்கு மற்றும் மேற்கு முனையங்களை எமக்கான துறைமுக முனையங்களாக மாற்றுவோம்.
எதிர்கட்சியினருக்கு 'சீன மேனியா' நோய் உள்ளது. நாம் சீனாவுடன் வியாபார வர்தக உறவை மேற்கொள்ளக்கூடாதா, அதில் என்ன தவறு உள்ளதென தெரிவிக்க வேண்டும். நாம் நிலத்தையோ வளத்தையோ எவருக்கும் விற்கவில்லை. நாட்டின் அபிவிருத்திக்காக இவற்றை பயன்படுத்திக்கொள்ளவே முயற்சிக்கின்றோம்.
கொழும்பு துறைமுகத்தை மட்டுமல்ல, காலி துறைமுகம், திருகோணமலை இயற்கை துறைமுகம் ஆகியவற்றையும் அபிவிருத்தி செய்யவுள்ளோம்.
சுற்றுலாத்துறையை கவரும் மிகவும் முக்கிய துறைமுகமாக காலி துறைமுகத்தை முழுமையாக புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், கொரியாவுடன் இது குறித்து கலந்துரையாடி வருகின்றோம். திருகோணமலை துறைமுகத்தையும் அதேபோல் வர்த்தக துறைமுகமாக மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM