இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தணிக்க உதவும் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு தொடர்பான முன்முயற்சிகள் குறித்து விவாதிக்க இந்தியாவும் இலங்கையும் நான்கு அம்ச அணுகுமுறைக்கு ஒப்புக்கொண்டுள்ளதாக தி இந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவினால் வழங்கப்பட்ட உணவு, மருந்துகள் மற்றும் எரிபொருள் கொள்வனவுகளுக்கான கடன் வரிகள், இலங்கையின் கொடுப்பனவுச் சமநிலைப் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கான நாணய மாற்று ஒப்பந்தம், திருகோணமலை எண்ணெய் குதங்களில் "ஆரம்பகால" நவீனமயமாக்கல் திட்டம் ஆகிய நான்கு தூண்கள் கொண்ட முன்முயற்சி இந்த முடிவுகளில் அடங்கும்.
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்ட விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை திரு. ஜெய்சங்கர், இந்தியா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்து சமுத்திர மாநாட்டைத் தொடங்கி வைக்கும் போது, இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை சனிக்கிழமை அபுதாபியில் சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM