சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் ஆய்வு செய்து, தீர்வு காண நியமிக்கப்பட்ட ஜனாதிபதி குழு, எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்துவதனால் ஏற்படும் விபத்துக்களை தவிர்ப்பதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த சில நாட்களில் நாடு முழுவதும் இடம்பெறுகின்ற எரிவாயு சிலிண்டர் வெடிப்பு தொடர்பிலான சம்பவங்களை கருத்திற்கொண்டு இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
சிலிண்டரில் கசிவுகள் இல்லை என்பதை உறுதிப்படுத்த, கொள்வனில் ஈடுபடும்போது எரிவாயு சிலிண்டரை பரிசோதிக்கவும்.
எரிவாயு கசிவு அல்லது கசிவு ஏற்பட்டால், சிலிண்டரை வீட்டிலிருந்து அகற்றி, நன்கு காற்றோட்டமான வெளிப்புற பகுதியில் வைக்கவும்.
சந்தேகத்திற்கிடமான சிலிண்டர் கசிவு ஏற்பட்டால், எரிவாயு விநியோகஸ்தர் அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தெரிவிக்க வேண்டும். எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு 0115 811 927 அல்லது 0112 811 929 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
குறிப்பாக விஞ்ஞானமற்ற முறையில் சிலிண்டர்களை பரிசோதிப்பதன் மூலம் பாரிய விபத்துக்கள் ஏற்படும் என்பதால், எரிவாயு சிலிண்டர்களில் தேவையற்ற பரிசோதனைகளை மேற்கொள்வதை தவிர்க்கவும்.
பல பகுதிகளில் பதிவாகியுள்ள எரிவாயு தொடர்பான விபத்துக்கள் குறித்து ஆழ்ந்த ஆய்வை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் இக் குழு தெரிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மொத்தம் 131 எரிவாயு கசிவு தொடர்பான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் குழு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM