(இராஜதுரை ஹஷான்)
ஜனவரி மாதம் முதல் 14 ரூபா குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 20 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என அகில இலங்கை தனியார் பஸ் சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பவித்ரா வன்னியராட்சி மறுப்பு தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினால் மக்கள் பொருளாதார பாதிப்புக்களை எதிர்க்கொண்டுள்ள நிலையில் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.
தனியார் பஸ் உரிமையாளர்கள் எதிர்க்கொண்டுள்ள சிக்கல் குறித்து மாற்று வழி முறைகளில் தீரவு வழங்கப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பஸ் கட்டணங்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் திருத்தம் செய்யப்பட வேண்டும். அதற்கமைய தற்போது 14 ரூபாவாக காணப்படும் குறைந்தப்பட்ச பஸ் கட்டணத்தை 20 ரூபாவாக அதிகரிக்கவும், ஏனைய கட்டணங்களை 15 ரூபா வரை திருத்தம் செய்யப்பட வேண்டும் எனவும் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.
எரிபொருள் விலையேற்றம், பஸ்களின் உதிரிபாகங்களினது விலையேற்றம் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு கட்டணத்தை திருத்தம் செய்யும் தீர்மானத்தை முன்னெடுத்துள்ளதாகவும்,அ தற்கான அறிவுறுத்தலை இலங்கை போக்குவரத்து சபையிடம் இவ்வாரம் அறிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந் நிலையிலேயே பஸ் கட்டணம் திருத்தம் தொடர்பில் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் முன்வைத்த யோசனைக்கு போக்குவரத்து துறை அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM