(எம்.மனோசித்ரா)
கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவில் சம்புக்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டிலுள்ளவர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் நபரொருவர் பொல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொல்லால் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 36 வயதுடைய சம்புகுளம், கல்மடு நகர் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
சம்பவம் தொடர்பில் 27, 38 மற்றும் 70 வயதுகளையுடைய இரு சகோதரர்களும் அவர்களுடைய சித்தாப்பாவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தர்மபுறம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM