பெருந்தோட்டங்களில் வைத்தியசாலைகளை துரிதமாக தேசிய மயமாக்கப்பட வேண்டிய கட்டாயமுள்ளது - அரவிந்தகுமார்

Published By: Digital Desk 2

01 Dec, 2021 | 02:46 PM
image

ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்

பெருந்தோட்டங்களில் தேசிய மயப்படுத்தப்பட்ட வைத்தியசாலைகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாத காரணத்தினால் ஏனைய வைத்தியசாலைகளை துரிதமாக தேசிய மயமாக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளதென ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம். அரவிந்தகுமார் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சுகாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

மலையக தோட்டப்புறங்களில் உள்ள வைத்தியசாலைகளை பொறுத்தவரை, முன்பெல்லாம் தோட்ட நிர்வாகத்தினால் பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அவ்வாறான நிலையொன்று இல்லை, இலாபத்தை கருத்தில் கொண்டு தோட்ட வைத்தியசாலைகளை கைவிடும் நிலைமையே காணப்படுகின்றது.

 ஒரு சில வைத்தியசாலைகளை அரச வைத்தியசாலையாக மாற்றினாலும் பல வைத்தியசாலைகள் கைவிடப்பட்டுள்ளன. ஆகவே சகல வைத்தியசாலைகளையும் தேசிய வைத்தியசாலைகளாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. 

ஏற்கனவே தேசிய மயப்படுத்தப்பட்ட  வைத்தியசாலைகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாத காரணத்தினால் ஏனைய வைத்தியசாலைகளை துரிதமாக தேசிய மயமாக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நாம் கொவிட் வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இன்னமும் அதன் தாக்கத்திற்கு முகங்கொடுத்து வருகின்றோம். சுகாதார தரப்பின் பங்களிப்புடன் கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முன்னெடுத்த முயற்சியை நாம் பாராட்ட வேண்டும். 

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் வேளையில் நாம் ஆரோக்கியமான, பாதுகாப்பான நிலையிலும், நோயை கட்டுப்படுத்தக்கூடிய நிலையிலும் உள்ளோம் என்றே கூற வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57