வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனும் பொது எதிரணியின் முக்கியஸ்தர்களுள் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவும் மைத்துனர்களாகும். எனவே இவர்கள் இருவரும் இரவில் கொழும்பில் வைத்து கோப்பி அருந்தி விட்டு அரசாங்கத்திற்கு எதிராக தீட்டிய திட்டமே 'எழுக தமிழ்' பேரணியாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய சதித்திட்டம் தீட்டப்படுகின்றது. இதன்பிரகாரம் தெற்கில் விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பிலவும் வடக்கில் சி.வி விக்கினேஸ்வரனும் குறித்த சதியின் முக்கிய பங்காளர்களாக உள்ளனர். மேலும் இனவாதத்தின் ஊடாக ஆட்சியை கவிழ்க்க இவர்கள் கூட்டு சேர்ந்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தினார்.
புற கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM