(இராஜதுரை ஹஷான்)
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானமிக்க மத்திய செயற்குழு கூட்டம் இன்று கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.
பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தின் கருத்துக்கள் கூட்டணி அரசாங்கத்தை முழுமையாக பலவீனப்படுத்தும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ தெரிவித்தார்.
சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று கட்சி தலைமையகத்தில் விசேட செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளது.
தேசிய பிரச்சினைகள் மற்றும் அரசியல் பிரச்சினைகள், 2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்படும். இன்று இடம்பெறும் செயற்குழு கூட்டம் தீர்மானமிக்கதாக அமையும்.
2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பிற்கு ஆதரவு வழங்குவதா, இல்லையா என்ற விடயம் குறித்து அதிக கவனம் செலுத்தப்படும்.
மக்கள் எதிர்க் கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வை பெற்றுக் கொள்ளும் வகையில் இம்முறை வரவு-செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படவில்லை.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. சுதந்திர கட்சியை பலவீனப்படுத்தும் வகையில் பொதுஜன பெரமுனவினர் திட்டமிட்ட வகையில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்கள்.
கூட்டணி அரசாங்கத்தில் முரண்பாடுகள் தோற்றம் பெறும் போது ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும்.
ஆனால் ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் தோற்றம் பெற்றுள்ள முரண்பாடுகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கூட்டணியில் உள்ள பங்காளி கட்சிகளை குறிப்பாக சுதந்திர கட்சியை புறக்கணித்து கருத்துரைப்பது வழமையாகி விட்டது. அவரது கருத்துக்கள் கூட்டணி அரசாங்கத்தை நிச்சயம் பலவீனப்படுத்தும்.
ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தலில் சுதந்திர கட்சி அரசியல் ரீதியில் மாற்று தீர்மானத்தை முன்னெடுத்திருந்தால் பொதுஜன பெரமுன ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியிருக்காது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM