எரிபொருள் விநியோகத்திற்கான ஏகாதிபத்திய உரிமத்தை இந்தியாவிற்கு வழங்க மாட்டோம் - ஆரசாங்கம்

30 Nov, 2021 | 12:49 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் அந்நிய செலாவணி இருப்பு வீழ்ச்சியடைந்துள்ளமையால் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளமை உண்மையாகும். 

அதற்காக எரிபொருள் விநியோகத்திற்கான ஏகாதிபத்திய உரிமத்தை இந்தியாவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு செவ்வாய்கிழமை (30) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாட்டில் அந்நிய செலாவணி இருப்பு வீழ்ச்சியடைந்துள்ளமையால் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளமை ஏற்றுக் கொள்கின்றோம். 

அதற்காக எரிபொருள் விநியோகத்திற்கான ஏகாதிபத்திய உரிமத்தை இந்தியாவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை. அதற்கான எந்தவொரு கலந்துரையாடல்களும் இடம்பெறவுமில்லை.

கொவிட் தொற்றின் காரணமாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் தாக்கமே இலங்கையிலும் ஏற்பட்டுள்ளது. 

அத்தோடு இரண்டு வருடங்களுக்கு முன்னர் காணப்பட்டதை விட மசகு எண்ணெணெய்யின் விலை உலக சந்தையில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. 

அதனால் இறக்குமதி செலவும் இரு மடங்காக அதிகரித்துள்ளது. எவ்வாறிருப்பினும் நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் எவ்வித தடையும் ஏற்படவில்லை.

மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் எரிபொருள் இறக்குமதிகளுக்கு மாத்திரமே அரசாங்கம் முன்னுரிமையளிக்கும். அத்தோடு நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் மக்களின் வாழ்வாதாரத்தை வழமையாகக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் 6 மாதங்களுக்குள் உலக பொருளாதாரமும் வழமைக்கு திரும்பி இலங்கையின் பொருளாதாரமும் வழமைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 13:57:29
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08