(நா.தனுஜா)
இலங்கை அரசாங்கம் ஏற்கனவே பாதிப்படைந்திருக்கும் அதன் நற்பெயருக்கு மேலும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றது.
தம்மால் இழைக்கப்பட்ட இனப்படுகொலையை மறைப்பதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சித்தாலும், போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதை சர்வதேச சமூகம் மறக்காது என்று கனடாவின் ப்ரம்ப்ரன் நகர மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார்.
மாவீரர் நாளான கடந்த சனிக்கிழமையன்று நினைவேந்தலைச் செய்வதற்காக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ் உள்ளிட்ட சுமார் 60 பேர் ஊர்காவற்றுறை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்திற்குச் செல்வதற்கு முற்பட்டபோது, அவர்கள் துப்பாக்கிகளைத் தரித்திருந்த படையினரால் தடுத்துநிறுத்தப்பட்டனர்.
அதனையடுத்து அவ்விடத்திலேயே அமர்ந்த அவர்கள், பின்னர் படையினரின் தடைகளை உடைத்துக்கொண்டு துயிலுமில்லத்திற்குச் சென்று ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
மேற்குறிப்பிட்டவாறு சுகாஸ் உள்ளிட்ட தரப்பினர் தரையில் அமர்ந்திருக்க படையினர் துப்பாக்கிகளை ஏந்தியவண்ணம் அவர்களைச் சூழ்ந்து நின்றுகொண்டிருக்கின்றவாறான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கின்றது.
இந்நிலையில் குறித்த புகைப்படத்தை மேற்கோள்காட்டி அதற்குக் கண்டனம் வெளியிடும் வகையில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கின்ற பதிவிலேயே கனடாவின் ப்ரம்ப்ரன் நகர மேயர் பட்ரிக் பிரவுன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதேவேளை பேஸ்புக் மற்றும் டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளப்பக்கங்களில் குறித்த புகைப்படத்தைப் பகிர்ந்து, 'இலங்கை அரசாங்கம் கூறுகின்ற நல்லிணக்கம் இதுதானா?' என்று கேள்வியெழுப்பியிருக்கும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், இதுகுறித்துக் கடுமையான கண்டனத்தையும் வெளியிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM