(நெவில் அன்தனி)
டிபெண்டர்ஸ் எவ்சிக்கு எதிராக கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (29) மாலை நடைபெற்ற சுப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் காலித் அஸ்மில் வெளிப்படுத்திய அற்புத ஆற்றல்களின் உதவியுடன் 2 - 0 என்ற கோல்கள் அடிப்படையில் அப்கன்ட்றி லயன்ஸ் கழகம் வெற்றிபெற்றது.
அப்கன்ட்றி லயன்ஸ் கழகம் போட்ட இரண்டு கோல்களிலும் அஸ்மிலின் பங்களிப்பு இருந்தமை விசேட அம்சமாகும். ஒரு கோல் போடப்படுவதில் பங்காற்றிய அஸ்மில், மற்றைய கோலை அவராகவே போட்டார்.
இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான போட்டி ஆரம்பித்ததும் டிபெண்டர்ஸ் எவ்சியின் ஆதிக்கம் வெளிப்பட்டது. அப்கன்ட்றி லயன்ஸ் கோல் எல்லையை டிபெண்டர்ஸ் எவ்சி ஆக்கிரமித்தபோதிலும் அப்கன்ட்றி லயன்ஸ் தலைவரும் கோல்காப்பாளருமான சுஜான் பெரேரா, எதிரணியின் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தி தனது அணியைக் காப்பாற்றிய வண்ணம் இருந்தார்.
போட்டியின் 26 ஆவது நிமிடத்தில் டிபெண்டர்ஸ் எவ்சி எல்லையில் 25 யார் தூரத்திலிருந்து கிடைக்கப்பெற்ற ப்றீ கிக்கை காலித் அஸ்மில், பந்து வளைந்து செல்லும் வகையில் மிகவும் இலாவகமாக உதைத்தார். டிபெண்ட்டர்ஸ் கோலை நோக்கிச் சென்ற பந்தை அணித் தலைவரும் பின்கள வீரருமான ஜேசுராஜ் பேர்னார்ட் தலையால் முட்டி திசை திருப்ப முயற்சித்தார். ஆனால் அவரது துரதிருஷ்டம் பந்து அவரது சொந்த கோலினுள்ளேயே சென்றது.
இந்த இனாம் கோல் மூலம் உற்சாகம் அடைந்த அப்கன்ட்றி லயன்ஸ் வீரர்கள் எதிரணியின் கோல் எல்லையை தொடர்ச்சியாக ஆக்கிரமித்த வண்ணம் இருந்தனர். ஆனால் இடைவேளை வரை எந்த மேலதிக கோல் எதுவும் போடவில்லை.
இடைவெளையின் பின்னர் கோல் நிலையை சமப்படுத்த டிபெண்டர்ஸ் எவ்சி முயற்சித்ததுடன் அப்கன்ட்றி லயன்ஸ் கழகம் கோல் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சித்தது.
போட்டியில் 4 நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது வலது பக்கத்திலிருந்து கிடைத்த கோர்ணர் உதையை வளைந்து செல்லும் வகையில் அஸ்மில் இடதுகாலால் உதைக்க, அப் பந்து கோலினுள் புகுந்தது.
இதன் மூலம் 2 - 0 என்ற கோல் அடிப்படையில் அப்கன்ட்றி லயன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM