போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான பன்னாட்டு கடற்படை நடவடிக்கையின் ஒரு பகுதியில் 145.3 தொன் கொக்கெய்ன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள 40 க்கும் மேற்பட்ட நாடுகளின் இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் நடத்திய சோதனையின் விளைவாக இவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கொலம்பியாவின் கடற்படை திங்களன்று தெரிவித்துள்ளது.
இதுவரை நடந்த மீட்பு நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட அதிக அளவிலான கொக்கெய்ன் தொகை இதுவாகும்.
ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் நடந்த இந்த விசேட நடவடிக்கையின் போது வெவ்வேறு நாடுகளை சேர்ந்த 575 சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையில் 66 தொன் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான பன்னாட்டு கடற்படை நடவடிக்கை தொடங்கப்பட்டதில் இருந்து 545 தொன்களுக்கும் அதிகமான கொக்கெய்ன் மற்றும் 224 தொன் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது என கொலம்பியாவின் கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM