(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
முல்லைத்தீவில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் ஒருவர் இராணுவத்தினரால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தமிழ் கட்சி எம்.பிக்கள் சபையில் கடும் கண்டனங்களை வெளியிட்டனர்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (29) இடம்பெற்ற மின்சக்தி அமைச்சு ,வலுசக்தி அமைச்சு ஆகியவற்றின் நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.க்களான செல்வம் அடைக்கலநாதன் , சார்ள்ஸ் நிர்மலநாதன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி.யான செல்வராஜா செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் தமது கடுமையான கண்டனங்களை வெளியிட்டனர்.
சனிக்கிழமை காலை முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளரான விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் என்பவர் முள்ளியவாய்க்கால் கிழக்கில் காலை செய்தி சேகரிப்பிற்காக சென்று அங்கிருந்து வீடு திரும்பிய நிலையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் பெயர் பலகையினை ஒளிப்படம் எடுத்துள்ளபோது அந்த பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட நான்கு இராணுவத்தினர் குறிப்பிட்ட ஊடகவியலாளர் மீது முள்ளு கம்பி சுற்றப்பட்ட பச்சை பனை மட்டை யினால் தாக்குதல் நடத்தியமை மிருகத்தனமானது எனவும் இவர்கள் குற்றம்சாட்டினார்.
அத்துடன் தாக்குதல் நடத்திய 3 இராணுவத்தினர் கண் துடைப்புக்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் கூட ஆஜர் செய்யப்பட்டது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் குற்றம்சாட்டிய தமிழ் எம்.பி.க்கள் ,நாட்டில் இராணுவ ஆட்சி நடப்பதற்கு இந்த தாக்குதல் சிறந்த உதாரணம் எனவும் குறிப்பிட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM