நாட்டில் மின்துண்டிப்பு ஏற்படும் : 2022 இல் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கிறார் ரணில்

Published By: Digital Desk 4

29 Nov, 2021 | 07:41 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டில் தற்போதுள்ள வெளிநாட்டு செலாவணியின் அளவு தொடர்பாக சபைக்கு அறிவிக்கவேண்டும். வெளிநாட்டு செலாவணி இல்லாமல்போனால் நாட்டில் மின் துண்டிப்பு ஏற்படும். மார்ச் மாதமாகும்போது உணவு தட்டுப்பாட்டுடன் வலுசக்தி தட்டுப்பாடும் ஏற்படும்  என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மக்கள் வழங்கியுள்ள ஆணையை இராணுவமயமாக்குவதன் நோக்கமென்ன..?: பாராளுமன்ற விஷேட  உரையில் ரணில் | Virakesari.lk

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (29) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இதுதொடர்பாக தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை ஆகும்போது வெளிநாட்டு செலாவணிகளின் தற்போதைய நிலை மற்றும் நாட்டில் இருக்கும் நிதி டொலர் ஊடாகவும் கையில் இருக்கும் தங்கங்களையும் டொலர் ஊடாக சபைக்கு அறிவிக்கவேண்டும்.

இதுதொடர்பான அறிக்கை மத்திய வங்கி சர்வதேச நாணய நிதியத்துக்கு அனுப்பி இருக்கவேண்டும். எம்மிடமிருக்கும் வெளிநாட்டு செலாவணியின் அளவை அடிப்படையாகக்கொண்டே வலுசக்தி தீர்மானிக்கப்படுகின்றது. 

வெளிநாட்டு செலாவணி குறைவடைந்தால், நாட்டில் மின் துண்டிப்பு ஏற்படலாம். அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் அதற்கு நாங்கள் எவ்வாறு முகம்கொடுப்பது என கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கலாம். அதற்காக வெளிநாட்டு செலாவணி தொடர்பான அறிக்கையை சபைக்கு சமர்ப்பிக்கவேண்டும்.

அத்துடன் எனக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் எம்மிடமிருக்கும் வெளிநாட்டு செலாவணி அளவு 1.5 டொலர் பில்லியனாகும்.

அதில் 300 தங்கம். அப்படியானால் எமது கையில் இருப்பது 1.2பில்லியனாகும். இந்த தகவல்களை வெள்ளிக்கிழமைக்கு மத்திய வங்கி சர்வதேச நாணய நிதியத்துக்கு அனுப்புகின்றது.

அவ்வாறு அனுப்பிய அறிக்கையையே நாங்கள் சபைக்கு வழங்குமாறு கேட்கின்றாேம். இவ்வாறான அறிக்கை இல்லை என்றால் மத்திய வங்கி எமக்கு பொய் சொல்கின்றது என்றே தெரிவிக்கவேண்டும்.

அத்துடன் மழைவீழ்ச்சி தற்போது அதிகரித்துள்ளதால் நீர் நிலைகள் நிரம்பிள்ளன. அதில் ஒரு பகுதி விவசாயத்தேவைக்கு நீர் விநியோகிக்க வேண்டும்.

அதன் பிறகு மீதமாகும் நீர் மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் களஞ்சியப்படுத்தி இருக்கும் மசகு எண்ணெய்யை ஒப்பிட்டு பார்க்கையில், மார்ச் மாதமாகும்போது நாட்டில் பாரிய பிரச்சினை ஏற்படும். உணவு தட்டுப்பாட்டுடன் வலுசக்தி தட்டுப்பாடும் ஏற்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47