இலங்கையிலும் 'ஒமிக்ரோன்' பரவியிருப்பதற்கான வாய்ப்புக்களுள்ளன - வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்

Published By: Digital Desk 3

29 Nov, 2021 | 07:36 PM
image

(எம்.மனோசித்ரா)

தென் ஆபிரிக்காவில் இனங்காணப்பட்டுள்ள 'ஒமிக்ரோன்' புதிய கொவிட் திரிபின் காரணமாக நாட்டை மீண்டும் முடக்குவது தொடர்பில் சுகாதார அமைச்சோ அல்லது அரசாங்கமோ இதுவரையில் எந்த பரிந்துரைகளையும் முன்வைக்கவில்லை. 

மீண்டும் முடக்கத்திற்கு செல்லாதவாறு செயற்படுவது அனைவரதும் பொறுப்பாகும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் 'ஒமிக்ரோன்' தொற்றுக்கு உள்ளாகியுள்ளனரா என்பதை வரும் போதே இனங்காண முடியாது. கொவிட் திரிபுகளை இனங்காண்பதற்கான பரிசோதனைகளிலேயே அதனை இனங்காண முடியும். 

பரிசோதனைகளின் ஊடாக இனங்காணப்படும் வரை நாட்டில் புதிய வைரஸ் பரவியிருப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளதாகவும் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் திங்கட்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் வரும் போதே 'ஒமிக்ரோன்' தொற்றுடன் வருவார்களா என்பதை முன்னரே இனங்காண முடியாது.

நாட்டில் முன்னெடுக்கப்படும் கொவிட் திரிபுகளை இனங்காண்பதற்கான பரிசோதனைகளிலேயே அதனை இனங்காண முடியும். அந்த பரிசோதனைகளின் ஊடாக இனங்காணப்படும் வரை நாட்டில் 'ஒமிக்ரோன்' பரவியிருப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. 

எனவே 'ஒமிக்ரோன்' நாட்டுக்குள் நுழைந்துள்ளதா இல்லையா என்பதை ஆராய்வதை விட , நுழையாமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்வதே தற்போது முக்கியத்துவமுடையதாகும்.

தென் ஆபிரிக்காவில் 'ஒமிக்ரோன்' புதிய பிறழ்வு கண்டறியப்பட்டுள்ள நிலையில் நாட்டை மீண்டும் முடக்குவதற்கான பரிந்துரைகள் சுகாதார அமைச்சினாலோ அல்லது அரசாங்கத்தினாலோ இதுவரையில் முன்வைக்கப்படவில்லை. 

அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுப்பதற்கும் எதிர்பார்க்கவில்லை. மீண்டும் முடக்கத்திற்கு செல்லாதிருக்கும் வகையில் செயற்படுவது அனைவரதும் கடமையாகும்.

விமான நிலையங்களில் உடனடி பி.சி.ஆர். பரிசோதனைகளை செய்வதன் ஊடாக புதிய திரிபுகளை இனங்காண முடியாது. காரணம் வெளிநாடுகளிலிருந்து நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் நாட்டு வருகை தருகின்றனர். 

இவர்கள் அனைவரது மாதிரிகளையும் திரிபுகளை இனங்காண்பதற்கான பரிசோதனைக்கு உட்படுத்துவது சாத்தியமற்றது. 

எனவே நாட்டுக்கு வருவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் பி.சி.ஆர். பரிசோதனை செய்துள்ளதோடு, முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டிப்பவர்களை விடுவித்து எஞ்சியுள்ளோரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் செயற்பாடே தற்போது முன்னெடுக்கப்படுகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54