ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்
மிகக் குறுகிய காலமே இந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்கும், கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறுவதை போன்று இந்த அரசாங்கமும் விரைவில் வெடிக்கும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக சபையில் தெரிவித்தார். வடக்கின் காணி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை, பெருந்தோட்ட அமைச்சு மற்றும் காணி அமைச்சு மற்றும் மூன்று இராஜாங்க அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
வடக்கு கிழக்கில் இளைஞர்களையும் தேசிய விவசாயத்துறையில் இணைத்துக்கொள்ள அவர்களுக்கு தேவையான நிலத்தை பெற்றுக்கொடுக்க மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்துக்கொண்டுள்ளதாக காணி அமைச்சர் அண்மையில் கூறினார். வடக்கு கிழக்கில் 40 கிராமங்களுக்கு அதிகமான பகுதிகள் 75 ஆண்டுகளாக அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனை நாமும் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தேன். அதேபோல் அவர்களின் காணிகளுக்காக உறுதியை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும், அவர்களின் நிலங்களை சட்ட ரீதியாக பெற்றுக்கொடுக்க வேண்டும். எனினும் சட்ட ரீதியில் பல இழுத்தடிப்புகள் இடம்பெறுவதால் அவர்களுக்கு உரிய நிலம் வழங்கப்படாது நிலம் பாவிக்கப்படாது கைவிடப்பட்டுள்ளது.
தேசிய காணி கொள்கை ஒன்றினை உருவாக்கி சகல காணி பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கான வேலைத்திட்டம் இந்த அரசாங்கத்திடம் உள்ளதா என்ற கேள்வியை கேட்க வேண்டியுள்ளது. நான் காணி அமைச்சராக இருந்த காலத்தில் பல வேலைத்திட்டங்களை கொண்டுவந்தேன். அதேபோல் காணி சட்டத்தில் பல திருத்தங்களை கொண்டு வந்தோம். சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் முன்னெடுக்க நடவடிக்கை எடுத்த போதும் ஆட்சி மாற்றத்துடன் அவை நிறுத்தப்பட்டுவிட்டது. மக்களின் காணி பிரச்சினைக்கு முறையான தீர்வுகளை வழங்குங்கள். யார் ஆட்சியில் இருந்தாலும் மக்களின் காணி பிரச்சினைக்கு தீர்வுகளை வழங்க வேண்டும். அதனையே நாமும் எதிர்பார்க்கின்றோம்.
அதேபோல் மலையக மக்கள் பாரிய நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதற்கு அரசாங்கத்தின் முட்டாள் தனமான தீர்மானங்களே காரணம். மலையக தேயிலை தோட்டங்களை தனியார் மயப்படுத்தி, நிறுவனங்களுக்கு வேறு காரணிகளுக்காக விற்கும் நடவடிக்கை காரணமாக மலையகத்தை சார்ந்த எமது மக்கள் துன்பப்படுகின்றனர். சிறு தேயிலை தோட்டங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அடுத்த ஆண்டில் பாரிய நெருக்கடி நிலையொன்று நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படும்.
கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறுவதை போன்று அரசாங்கமும் வெடிக்கும் நிலையில் உள்ளது. ஒவ்வொரு நாளும் காலையில் அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுக்கொண்டுள்ள வெடிப்பை பார்க்கையில் அவ்வாறே நினைக்கத்தொன்றுகின்றது. இன்னும் குறுகிய காலமே இந்த அரசாங்கம் இருக்கப்போகின்றது. அதற்குள் மக்களின் காணி பிரச்சினைகளை தீருங்கள் எனவும் அவர் சபையில் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM