மற்றுமொரு எரிவாயு சிலிண்டர் வெடிப்பு ! எவருக்கும் பாதிப்பில்லை !

Published By: Digital Desk 3

26 Nov, 2021 | 03:45 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் அண்மைக்காலமாக சமையல் எரிவாயு கசிவின் காரணமாக அடுத்தடுத்து வெடிப்பு சம்பவங்கள் பதிவாகிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் குருணாகல் - நிக்கவரெட்டி பொலிஸ் பிரிவில் கந்தேகெதர பிரதேசத்திலும் இன்றைய தினம் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. 

குறித்த பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இன்று முற்பகல் வேலையில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வெடிப்பு இடம்பெற்ற போது வீட்டில் எவரும் இருக்கவில்லை என்பதால் உயிர் ஆபத்துக்கள் ஏற்படவில்லை என்றும் , எனினும் வீட்டிலுள்ள உடைமைகள் சேதமடைந்துள்ளதாகவும் நிக்கவரெட்டிய பொலிஸார் தெரிவித்தனர். 

சமையல் எரிவாயு கசிவின் காரணமாகவே இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்தாகவும் நிக்கவரெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை,  பொலன்னறுவை மாவட்டம் வெலிகந்த - சுதுன்பிட்டி பிரதேசத்தில் சமையல் எரிவாயு கசிவினால் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். 

கடந்த 13 ஆம் திகதி வீட்டில் தனித்திருந்த குறித்த யுவதி எரிவாயு அடுப்பினை தீக்குச்சியால் பற்றவைக்க முயற்சித்த போதே வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினத்தன்று வீட்டில் உறவினர்கள் இருக்கவில்லை. எனவே அயலவர்களால் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இவ்வாறு கடந்த 13 ஆம் திகதி முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் , நேற்று  வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த இரு சம்பவங்களுடன் இணைத்து இம்மாத்தில் மாத்திரம் சமையல் எரிவாயு கசிவின் காரணமாக 6 வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

கடந்த 4 ஆம் திகதி வெலிகம -  கப்பரதொட்ட பகுதியிலுள்ள உணவகமொன்றிலும் , கடந்த 16 ஆம் திகதி இரத்தினபுரி பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றிலும் , 20 ஆம் திகதி கொழும்பிலுள்ள குதிரை பந்தய திடலின் பார்வையாளர் கூடத்திற்கருகிலிருந்த உணவகத்திலும் அடுத்தடுத்து வெடிப்பு சம்பவங்கள் பதிவாகின.

இந்த வெடிப்பு சம்பவங்களுக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று பிரதான சமையல் எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளதோடு , பாவனையாளரின் கவனயீனமே இதற்கான காரணம் என்றும் அவை குறிப்பிடுகின்றன.

எவ்வாறிருப்பினும் இவ்வாறு தொடர்ச்சியாகப் பதிவாகிக் கொண்டிருக்கும் வெடிப்பு சம்பவங்களுக்கான உண்மை காரணியை அறிந்து , நுகர்வோர் மற்றும் பாவனையாளரான பொது மக்களின் உயிர் பாதுகாப்பு அரசாங்கம் உள்ளிட்ட உரிய தரப்பினர் உறுதிப்படுத்த வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17