(எம்.மனோசித்ரா)
நாட்டில் அண்மைக்காலமாக சமையல் எரிவாயு கசிவின் காரணமாக அடுத்தடுத்து வெடிப்பு சம்பவங்கள் பதிவாகிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் குருணாகல் - நிக்கவரெட்டி பொலிஸ் பிரிவில் கந்தேகெதர பிரதேசத்திலும் இன்றைய தினம் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இன்று முற்பகல் வேலையில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வெடிப்பு இடம்பெற்ற போது வீட்டில் எவரும் இருக்கவில்லை என்பதால் உயிர் ஆபத்துக்கள் ஏற்படவில்லை என்றும் , எனினும் வீட்டிலுள்ள உடைமைகள் சேதமடைந்துள்ளதாகவும் நிக்கவரெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
சமையல் எரிவாயு கசிவின் காரணமாகவே இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்தாகவும் நிக்கவரெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, பொலன்னறுவை மாவட்டம் வெலிகந்த - சுதுன்பிட்டி பிரதேசத்தில் சமையல் எரிவாயு கசிவினால் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 13 ஆம் திகதி வீட்டில் தனித்திருந்த குறித்த யுவதி எரிவாயு அடுப்பினை தீக்குச்சியால் பற்றவைக்க முயற்சித்த போதே வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
சம்பவ தினத்தன்று வீட்டில் உறவினர்கள் இருக்கவில்லை. எனவே அயலவர்களால் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இவ்வாறு கடந்த 13 ஆம் திகதி முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் , நேற்று வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த இரு சம்பவங்களுடன் இணைத்து இம்மாத்தில் மாத்திரம் சமையல் எரிவாயு கசிவின் காரணமாக 6 வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த 4 ஆம் திகதி வெலிகம - கப்பரதொட்ட பகுதியிலுள்ள உணவகமொன்றிலும் , கடந்த 16 ஆம் திகதி இரத்தினபுரி பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றிலும் , 20 ஆம் திகதி கொழும்பிலுள்ள குதிரை பந்தய திடலின் பார்வையாளர் கூடத்திற்கருகிலிருந்த உணவகத்திலும் அடுத்தடுத்து வெடிப்பு சம்பவங்கள் பதிவாகின.
இந்த வெடிப்பு சம்பவங்களுக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று பிரதான சமையல் எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளதோடு , பாவனையாளரின் கவனயீனமே இதற்கான காரணம் என்றும் அவை குறிப்பிடுகின்றன.
எவ்வாறிருப்பினும் இவ்வாறு தொடர்ச்சியாகப் பதிவாகிக் கொண்டிருக்கும் வெடிப்பு சம்பவங்களுக்கான உண்மை காரணியை அறிந்து , நுகர்வோர் மற்றும் பாவனையாளரான பொது மக்களின் உயிர் பாதுகாப்பு அரசாங்கம் உள்ளிட்ட உரிய தரப்பினர் உறுதிப்படுத்த வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM