(நா.தனுஜா)
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் அவற்றை முடிவிற்குக்கொண்டுவருவதையும் இலக்காகக்கொண்டு இலங்கையிலுள்ள நெதர்லாந்து தூதரகத்தினால் இன்றைய தினம் வியாழக்கிழமை 'ஒரேன்ஞ் த வேல்ட்' என்ற பிரசாரம் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டது.
உலகளாவிய ரீதியில் மூன்று பெண்களில் ஒருவர் என்ற அடிப்படையில் பெண்கள் தமது வாழ்நாளில் உடலியல் அல்லது பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றார்கள். எனவே இத்தகைய பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு கடந்த 1991 ஆம் ஆண்டு தொடக்கம் சர்வதேச ரீதியில் 'ஒரேன்ஞ் த வேல்ட்' என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
அதன் ஓரங்கமாகவே இலங்கையிலுள்ள நெதர்லாந்து தூதரகத்தினால் நேற்றை தினம் 'ஒரேன்ஞ் த வேல்ட் : பாலின ரீதியான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் பிரசாரம்' என்ற முன்னெடுக்கப்பட்டது.
.
அப்பிரசாரத்தின்படி 'பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை எதிர்ப்போம்' என்று ஆங்கிலம், தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் எழுதப்பட்ட பதாகையை ஏந்தியவாறு சைக்கிளில் பயணித்த இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் தன்ஜா கொன்க்ரிஜ்ப், கொழும்பிலுள்ள ஏனைய தூதரகங்கள் மற்றும் சர்வதேச கட்டமைப்புக்களின் அலுவலகங்களுக்குச் சென்று அவற்றின் முகப்பில் மேற்படி பதாகையைக் காட்சிப்படுத்தினார். அவருடன் தூதரக அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் இணைந்துகொண்டனர்.
நெதர்லாந்து தூதரகத்தினால் முன்னெடுக்கப்பட்ட மேற்படி பிரசாரத்தின்கீழ் 'பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை எதிர்ப்போம்' என்ற பதாகை இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம், கனேடியத்தூதரகம், பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம், பிரான்ஸ் தூதரகம் மற்றும் இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் ஆகியவற்றின் முன்றலில் காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM