(எம்.மனோசித்ரா)
கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஒரு பன்முக ஆராய்ச்சி மையமான சமகால இந்திய கற்கைகளுக்கான மையத்தின் அங்குரார்ப்பணம் ஊடாக இருநாடுகளுக்கும் இடையிலான நிறுவனமயப்படுத்தப்பட்ட வலையமைப்பின் ஊடாக பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டிருப்பதாக இலங்கைக்கான இந்திய பதில் உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
பல்துறைசார் அணுகுமுறை ஒன்றின் ஊடான தாக்கம் நிறைந்த ஆராய்ச்சி, என்ற தலைப்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட வருடாந்த ஆராய்ச்சி கருத்தரங்கில் பதில் உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ், கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சந்திரிகா என் விஜயரத்ன, பழைய மாணவர்கள், விஞ்ஞானிகள், பீட உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோரும் இந்த கருத்தரங்கில் பங்கேற்றிருந்தனர்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக உரை நிகழ்த்தியிருந்த பதில் உயர் ஸ்தானிகர், நோபல் வெற்றியாளரான குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயங்கள் உட்பட, இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் வரலாற்றுரீதியான கல்விசார் தொடர்புகளின் முக்கியத்துவம் தொடர்பாகவும் இந்த சந்தர்ப்பத்தில் நினைவூட்டியிருந்தார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாளி வளாகத்தின் அதி உயர்ந்த கல்வி சாதனையாளரை அங்கீகரிக்கும் முகமாக குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் பெயரில் தங்கப்பதக்கம் ஒன்றினை இந்திய உயர் ஸ்தானிகராலயம் நிறுவியிருப்பதை அவர் இந்தச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டிருந்தார்.
2020 புதிய தேசிய கல்வி கொள்கை உட்பட கடந்த சில வருடங்களில் இந்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை சுட்டிக்காட்டியிருந்த பதில் உயர் ஸ்தானிகர், சமகால சவால்களுக்கு புதிய தீர்வுகள் தேவை என்றும் அத்தீர்வுகளை பல்துறைசார் அணுகுமுறை ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
2015 ஆம் ஆண்டில் இந்திய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப திணைக்களமானது அறிவாற்றல் அறிவியல் ஆராய்ச்சி முன்முயற்சி திட்டத்தின்கீழான விஞ்ஞான ஆராய்ச்சி முன்னெடுப்பு திட்டத்திற்கமைவாக யோகா மற்றும் தியானத்திற்கான விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் என்ற புதிய நிகழ்ச்சி திட்டத்தினை அபிவிருத்தி செய்ததுடன் ஒரு பல்துறைசார் அணுகுமுறை அடிப்படையில் இதனூடாக நரம்பியல் விஞ்ஞானம், மருத்துவம், உளவியல், தத்துவம் போன்றவற்றுடனான இடைத்தோற்றத்தை இது வழங்குகின்றது.
அதன் அளப்பரிய மூலதனமான அறிவு, வலுவான பல்துறைசார் அணுகுமுறை, துடிப்பான ஆரம்பநிலை சூழல் மற்றும் பொது-தனியார் பங்குடைமை ஆகியவற்றின் காரணமாக, இந்தியா 2021 இல் உலகளாவிய புத்தாக்க குறிப்பேட்டில் 46வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2015இல் 81வது இடத்திலிருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இது அமைகின்றது, என அவர் இங்கு குறிப்பிட்டார்.
கோப்-26 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியினால் உறுதியளிக்கப்பட்டதை போன்று மிகவும் வலுவான உறுதியான நடவடிக்கைகள் ஊடாக காலநிலை மாற்றத்திற்கு எதிராக போராடுவதற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பு மற்றும் இலக்கு ஆகியவை தொடர்பாகவும் அவர் இங்கு கருத்து தெரிவித்திருந்தார்.
குறிப்பாக 2070 இல் காபன் வெளியேற்றத்தினை பூச்சியமாக்கும் இலக்கு மற்றும் ஒட்டுமொத்த சக்தி வலையமைப்பில் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான முக்கியத்துவம் ஆகியவற்றுடன் 'பஞ்சாமிர்தம்' அல்லது ஐந்து கூறுகளைக் கொண்ட செயற்பாடுகள் என அழைக்கப்படும் இந்த எதிர்கால நடவடிக்கைகள் கிளஸ்கோ மாநாட்டில் ஒரு முக்கிய விடயமாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அதுமட்டுமல்லாமல், கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஒரு பன்முக ஆராய்ச்சி மையமான சமகால இந்திய கற்கைகளுக்கான மையத்தின் அங்குரார்ப்பணம் ஊடாக இருநாடுகளுக்கும் இடையிலான நிறுவனமயப்படுத்தப்பட்ட வலையமைப்பின் ஊடாக பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் பதில் உயர் ஸ்தானிகர் தெரிவித்தார்.
புதுப்பிக்கத்தக்க சக்தி, காலநிலை மாற்றம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் ஸ்திரமான அபிவிருத்தி ஆகிய துறைகளில் காணப்படும் உறுதியான இருதரப்பு உறவு குறித்து நினைவூட்டிய அவர், ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் சமூகத்தின் சிறந்த நிலை ஆகியவற்றின் முன்னேற்றத்திற்காக இருநாடுகளும் முன்வைத்திருக்கும் வாய்ப்புக்களை சகல கல்வியாளர்கள் மற்றும் புலமையாளர்களும் முழுமையாக பயன்படுத்தவேண்டும் எனவும் அழைப்பு விடுத்திருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM