(எம்.மனோசித்ரா)
வெகுசன ஊடகங்கள் மற்றும் தொடர்பாடல் துறையின் உலகளாவிய வளர்ச்சியை கருத்தில் கொண்டு இலங்கையில் ஊடகங்களைத் தரப்படுத்துவதற்காக காணப்படும் கட்டளைச் சட்டங்கள், சர்வதேச கட்டளைச் சட்டங்கள், உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடக நிறுவனங்களின் செயற்பாடு மற்றும் சமூக, கலாச்சார தனித்துவங்கள் போன்ற துறைகளில் விசேட கவனத்தைச் செலுத்தி இலங்கைக்கான வெகுசன ஊடக கொள்கையொன்றை தயாரித்தல், அதற்கு இணையாக உயரிய தொழில்வாண்மையுடன் கூடிய ஊடக தொழில் வல்லுநர்களை உருவாக்கத் தேவையான பின்னணியை உருவாக்கல், சமூக ஊடகங்கள் உள்ளிட்ட புதிய ஊடகங்களைப் பயன்படுத்தல் மற்றும் நடத்தைகள் தொடர்பான அறிவு, புரிதல் மற்றும் தொடர்பான உத்திகளை சமூகமயப்படுத்தல், டிஜிட்டல் தொழிநுட்பத்திற்கு இசைவாக்கமடைதல் போன்றவற்றுக்குத் தேவையான வசதியளித்தல் தொடர்பாக தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
அதற்காக சமகாலத்திற்குப் பொருத்தமான வகையில் ஊடகவியலாளர்களுக்கும் வெகுசன ஊடகங்களுக்கும் ஏற்புடையதாகக் காணப்படும் சட்டத் திருத்தங்கள் மற்றும் கொள்கைகள் மற்றும் ஒழுக்கவிதிகளைத் தயாரிக்க வேண்டிய தேவை அடையாளங் காணப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த அரச மற்றும் தனியார் துறை ஊடகங்கள், சந்தைப்படுத்தல், கல்வி ரீதியான, சட்டங்கள், நிர்வாகம் மற்றும் பொருளாதாரம் போன்ற துறைகளில் அனுபவம் வாய்ந்த நபர்களின் பிரதிநிதித்துவத்துடனான குழுவொன்றை நியமிப்பதற்காக வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM