கிளிநொச்சி தட்டுவன்கொட்டி கிராமத்துக்கான பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகள் முன்னெடுப்பதற்கான ஒப்பந்த காலம் நிறைவடைந்து ஒருவருடம் கடந்த நிலையிலும் புனரமைப்பு பணிகள் உரிய காலத்தில் முன்னெடுக்கப்படவில்லையென அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதனால் தற்போதைய பருவ மழையினால் குறித்த கிராமத்துக்கான போக்குவரத்துக்களில் பல்வேறு இடர்பாடுகள் காணப்படுவதாகவும் அப் பிரதேச மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தட்டுவன்கொட்டி கிராமத்தில் 95 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்போது வாழ்ந்து வருகின்றன.
இந்தநிலையில் கடலாலும் சதுப்பு நிலங்களாலும் சுழப்பட்ட குறித்த கிராமத்திற்கான ஒரே ஒரு போக்குவரத்து வீதியாக ஆணையிறவு தட்டுவன்கொட்டி வீதி காணப்படுகின்றது.
குறித்த வீதி புனரமைப்புக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளபோதும் அதன் புனரமைப்புப் பணிகள் மந்தகதியில் மேற்கொள்ளப்படுகின்றன.
அதாவது கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒப்பந்த வேலைகள் நிறைவேற்றப்படவேண்டும். ஆயினும் இந்த வீதி புனரமைக்கப்படாத நிலையில் தாங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்படி கிராமத்திலிருந்து 25 க்கும் மேற்பட்டோர் ஆடைத் தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்வதாகவும், 20 வரையான மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் நிலையிலும் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே குறித்த வீதியை புனரமைப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM