தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பெயரை மாற்றியமைப்பது தொடர்பிலும் அந்நிறுவனத்தை மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டு வருவதை வலியுறுத்தியும் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றைத் சமர்ப்பித்திருப்பதாக அமைச்சர் பழனி திகாம்பரம் நேற்று சபையில் தெரிவித்தார்.
இம்மன்றத்தில் இடம்பெற்றுள்ள பாரிய நிதி மோசடி தொடர்பில் ஆய்வு செய்யும் பொருட்டு கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள போதிலும் அதன் அதிகாரிகள் ஒத்துழைப்பினை நல்குவதில் பின்னடித்து வருகின்றனர். எனினும் கணக்காய்வு அறி க்கை கிடைத்ததும் தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் 8 அமைச்சுக்களுக்கான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜே.வி.பி.யின் விஜித்த ஹேரத் எம்.பி.யின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் திகாம்பரம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை, காணி, வீட்டு உரிமை, அடிப்படை சுகாதார வசதி மற்றும் தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் ஆகியன தொடர்பில் பல்வேறு கேள்விகளை விஜித்த ஹேரத் தொடுத்தார்.
ஒரு சந்தர்ப்பத்தில் தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தில் நிதி மோசடி இடம்பெற்றிருப்பதாகக் குறிப்பிட்ட விஜித்த ஹேரத் எம்.பி. தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தை “திகாம்பரம் மன்றமாக” மாற்றியமைக்கத் திட்டம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.
இதன் போது அமைச்சர் திகாம்பரம் இங்கு மேலும் கூறுகையில்,
தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளது. தனிநபர் ஒருவரின் பெயரில் இயங்கும் இந்நிறுவனத்திற்கு 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு இடம்பெற்றுள்ளது. இது மக்களுக்கு சொந்தமான பணமாகும். எனவே இதில் மோசடி இடம்பெற்றதை ஏற்க முடியாது.
இங்கு இடம்பெற்றுள்ள மோசடிகளை ஆராயுமாறு கணக்காய்வுப்பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனினும் அங்குள்ள அதிகாரிகள் இவ்விடயத்தில் ஒத்துழைப்புகளைத் தருவதாக இல்லை. எப்படியிருப்பினும் கணக்காய்வு அறிக்கை கிடைக்கப் பெற்றதும் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பெயரை மாற்றியமைத்தல் மற்றும் அதனை எனது அமைச்சின் கீழ் கொண்டு வருதல் ஆகியவை தொடர்பில் அமைச்சரவைக்கு பத்திரம் ஒன்றை சமர்ப்பித்துள்ளேன்.
அத்துடன் நாம் 1000 ரூபாவைப் பெற்றுத் தருவோம் என்று ஒரு போதும் கூறவில்லை. 1500 ரூபாவை தோட்டத் தொழிலாளர்களுக்குப் பெற்றுக் கொடுத்தாலும் நாம் மகிழ்ச்சியடைவோம். ஆனால் முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானே தேர்தல் வெற்றியை இலக்காக வைத்து 1000 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுத் தருவதாக கூறினார். அத்துடன் இப்போதைய அரசாங்கம்தான் தோட்டத் தொழிலாளர்களின் வீடமைப்புக்கென 1000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்காக நாம் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM