பிரதேச செயலகத்திற்குட்பட்ட வேப்பமடு பகுதியிலுள்ள குளத்தில் அனுமதிப் பத்திரமில்லாமல் மணல் கொள்ளையர்களால் பல நாட்களாக சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெற்று வருவதனால் பாரிய இயற்கை அழிவு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
தொடர்ந்து மணல் அகழ்வில் ஈடுப்பட்டு வருவதினால் அப்பகுதியிலுள்ள குளம் ஆழம் ஏற்பட்டுள்ளதாகவும், குளம் உடைந்துள்ளதாகவும் குறித்த மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனால் அப்பகுதியால் செல்லும் பாதை முற்றாக உடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவலை வழங்கினால் மணல் கொள்ளையர்களை கைதுசெய்து பின்னர் அவர்களிடம் இலஞ்சத்தைப் பெற்றுவிட்டு விடுவிப்பதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இந்தநிலையில் ஜனாதிபதி, பிரமதர் உட்பட பல அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் முறைப்பாடு செய்திருந்தும், இதுவரையிலும் மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களைக் கைதுசெய்வதற்கோ, மணல் அகழ்வை தடுத்து நிறுத்துவதற்கோ எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவர்கள் கைதுசெய்யப்பட வேண்டுமென்றும் சட்டவிரோத மணல் அகழ்வு தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்றும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தினால் இயற்கை வளங்களை அழிவுகளிலிருந்து பாதுகாக்க முடியுமென மக்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM