தங்க கடத்தலில் ஈடுபட்ட 10 இலங்கையர்கள் பெங்களூர் விமான நிலையத்தில் கைது

Published By: Vishnu

23 Nov, 2021 | 09:53 AM
image

பெங்களூரில் உள்ள கெம்பெகவுடா சர்வதேச விமான நிலையத்தில் உடலில் மறைத்து வைத்து சூட்சுமமாக தங்கம் கடத்திய குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு ஆண்களையும் எட்டு பெண்களையும் கைது செய்துள்ளதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் திங்கட்கிழமை தெரிவித்தனர்.

இந்திய சுங்கப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு இணங்க இந்த கைது நடவடிக்கை சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானமான UL 171 இல் 140 பயணிகளுடன் இணைந்து பெங்களூருக்கு பயணித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி 1 கோடி இந்திய ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அவர்களிடம் இருந்து பெறப்படும் தகவலை அடிப்படையாக கொண்ட தங்கக் கடத்தலில் தொடர்புடைய முழு கும்பலையும் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58