(வத்துகாமம் நிருபர்)
பேராதனை கலஹா வீதியில் இடம் பெற்ற வாகன விபத்து ஒன்றில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேராதனை கலஹா வீதியில் பல்கலைக்கழகத்திற்குச் சமீபமான ஹிந்தகல பிரதேசத்தில் மணல் லொறி ஒன்றுடன் இம் மாணவன் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விடத்திற்கு அண்மையில் மாணவர் விடுதி ஒன்று உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக மேற்படி மாணவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவ் விபத்தில் உயிரிழந்தவர் இரத்தினபுரியை சேர்ந்த 23 வயதுடைய சொய்சா என்ற மாணவன் என அறியப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM